Pages

Thursday, February 5, 2009

பஞ்சீகரணம்




கொஞ்சம் கவனமா பாத்துகிட்டே வாங்க.
சூக்ஷ்ம பஞ்ச பூதம் 10 ஆச்சு. அதாவது எல்லாம் பாதி பாதியா பிரிஞ்சது. 50% -50%
இதில ஒரு பாதி நாலா பிரிஞ்சது. ஒவ்வொண்ணும் 12.5 %. 12.5 *4 =50% சரிதானே!
இப்ப ஒவ்வொரு பூதமும் தன்னோட 50% + மத்த நாலிலே ஒவ்வொண்ணிலேந்தும் 12.5% சேத்துகிட்டு ஸ்தூல பூதமாகும். ரிசல்ட் டுக்கு எது 50% இருக்கோ அதோட பேர் வரும்.
ரிசல்ட் என்னன்னு பாக்கலாமா?
ஸ்தூல பூதத்திலே இருக்கிற தமோ குண சூக்ஷ்ம பூதம்:


கணக்கு சரியா போச்சா? ஒவ்வொண்ணுத்திலேயும் 100% சரியா இருக்கு.
ஐந்தும் மத்ததோட சேந்து சமஷ்டியா இருக்கு.

இந்த பஞ்ச பூதங்கள்தான் சாதாரணமா அடிபடறவை.
இவற்றிலேந்து நாலு வகை யோனி - பிறப்பிடம், ஏழு வகை தோற்றமா தூல (solid) உடம்புகள் வந்தன.
நாலு வகை யோனி?
1. சராயுஜம். ஒரு கர்பப்பை. அதில இருந்து வளர்ந்து உரிய காலத்திலே பிறக்கிறது. பாலூட்டிகள்.
2. அண்டஜம். முட்டையிலேந்து பிறக்கிறது. பறவைகள், மீன்கள் போல
3. ஸ்வேதஜம் வேர்வையிலேந்து பிறக்கிறது. இது கொஞ்சம் புதிராதான் இருக்கு. விஞ்ஞான ரீதியா பாத்தா வியர்வை சுரப்பிகள்ள இருக்கிற சில பாக்டீரியாதான் சொல்லலாம். பேன் போன்றதுன்னு நான் பாக்கிற உசாதுணை நூல்லே இருக்கு. சில உயிரினங்கள் இருந்து காலப்போகிலே மறைந்து போயிடுத்தோ என்னவோ!
4. உத்பிஜம் - விதையிலேந்து வருபவை. தாவரங்கள்.

ஏழு வகை பிறப்பு?
1.தேவர்
2.மனிதர்
3.விலங்குகள்
4.பறவைகள்
5.ஊர்வன
6.நீர் வாழ்வன
7.தாவரங்கள்

ஏழு வகை பிறப்பு அனைத்தும் உத்தம ஜாதி, (1,2) மத்திம ஜாதி (3,4,5) மற்றும் அதம ஜாதி(7) ன்னு பிரியும்.
-----------
41.
ஐந்து பூதமும் பத்தாக்கி யவைபாதி நன்னான் காக்கி
நந்துதம் பாதிவிட்டு நான்கொடு நான்குங்கூட்ட
வந்தன தூலபூத மகாபூத மிவற்றினின்றுந்
தந்தன நான்காந்தூல தநுவண்ட புவனபோகம்.

ஐந்து பூதமும் பத்தாக்கி (ஒவ்வொன்றையும் இரண்டாக்கி) அவை பாதி நன்னான்காக்கி (அவற்றின் ஒரு பாதியை வைத்து மற்ற பாதியை ஒவ்வொன்றையும் நான்கு ஆக்கி) நந்து தம் பாதி விட்டு (பெரிய அரைப்பாகங்களில் தத்தம் பாகத்தை விட்டு ) நான்கொடு நான்கும் கூட்ட (மற்ற 4 பூதங்களின் அரைக்கால் பாகத்துடன் கூட்ட) வந்தன தூல பூதம். மகாபூதம் இவற்றினின்றும் தந்தன (சிருட்டிக்கப்பட்டன) நான்காம் (சராயுசம், அண்டசம், சுவேதசம், உற்பீசம் ஆகிய 4 யோனிகளில் பிறக்கும்) தூல தநு (பரு உடல்) அண்ட (பிரமாண்டங்கள்) புவன (பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்திய ஆகிய7 மேல் உலகங்கள் + அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதால ஆகிய7 கீழ் உலகங்கள்) போகம் (அன்னம் முதலானவை).


3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஏதோ புரிந்தமாதிரி இருக்கு...ஆனால் முழுதாக அறிந்தேன் என்று சொல்ல முடியல்ல திவாண்ணா. கடந்த 15-20 நாட்களில் நீங்க போட்ட இடுகைகளை தொகுத்து, தொடர்ந்து படிக்க வேண்டும். அப்போது தொடர்புகள் முழுதும் புரியும் என்று நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

//1. சராயுஜம். ஒரு கர்பப்பை. அதில இருந்து வளர்ந்து உரிய காலத்திலே பிறக்கிறது. பாலூட்டிகள்.
2. அண்டஜம். முட்டையிலேந்து பிறக்கிறது. பறவைகள், மீன்கள் போல
3. ஸ்வேதஜம் வேர்வையிலேந்து பிறக்கிறது. இது கொஞ்சம் புதிராதான் இருக்கு. விஞ்ஞான ரீதியா பாத்தா வியர்வை சுரப்பிகள்ள இருக்கிற சில பாக்டீரியாதான் சொல்லலாம். பேன் போன்றதுன்னு நான் பாக்கிற உசாதுணை நூல்லே இருக்கு. சில உயிரினங்கள் இருந்து காலப்போகிலே மறைந்து போயிடுத்தோ என்னவோ!
4. உத்பிஜம் - விதையிலேந்து வருபவை. தாவரங்கள்.//

இது மட்டும் நல்லாவே புரிஞ்சது. டேபிள் போட்டு ஆகாசம் 50% மத்தது 12.5% கொடுத்து ஸ்தூலம்னு சொல்லி இருக்கீங்க. கடைசியில் மண் 12.5% ஆரம்பிச்சு 50% முடிச்சு, சூக்ஷ்மம்னு சொல்றீங்க. அப்போ ஆகாசம் ஸ்தூலம், மண், சூக்ஷ்மமா??

மிச்சம் அப்புறமாத் தான், மண்டையிலே ஏறவே நேரம் ஆகிறது. :((((((

திவாண்ணா said...

இது மட்டும் நல்லாவே புரிஞ்சது. டேபிள் போட்டு ஆகாசம் 50% மத்தது 12.5% கொடுத்து ஸ்தூலம்னு சொல்லி இருக்கீங்க. கடைசியில் மண் 12.5% ஆரம்பிச்சு 50% முடிச்சு, சூக்ஷ்மம்னு சொல்றீங்க. அப்போ ஆகாசம் ஸ்தூலம், மண், சூக்ஷ்மமா??
--
இல்லை. எப்பவும் பட்டியல்கள்லே தலைப்பை பாக்கணும். முதல் வரி முதல் பத்தியிலே இருக்கிற ஸ்தூல பூதம் என்கிறது மேலிருந்து கீழே உள்ள எல்லாத்துக்கும் தலைப்பு. முதல் வரில இருக்கிற மீதி அதே போல ஒவ்வொரு பத்தியிலேயும் இருக்கிற சூக்கும பூதத்துக்கான தலைப்பு.

உதாரணமா ஆகாச ஸ்தூல பூதத்தை எடுத்துக்கலாம். அதிலே என்ன இருக்கு? அது 100% ஆகாச சூக்ஷ்ம பூதம் இல்லை. 50% தான். மீதி 50% வாயு, அக்னி, நீர், நிலம் நாலும் சமமா இருக்கும். இதைதான் இரண்டாவது வரி சுட்டிக்காட்டுது.

உதாரணமா சூக்ஷ்ம பூதமான மண் எப்படி எல்லாம் பிரிஞ்சு விரவி இருக்கு?
அது ஸ்தூல மண்ணிலே 50% உம் ஸ்தூலமா இருக்கிற மத்த நாலிலே மீதி சமமாயும் பிரிஞ்சு இருக்கு. இதைதான் கடைசி பத்தி காட்டுது.