Pages

Wednesday, February 11, 2009

அபவாதம்



46.
அதிட்டானத்தை தவிர ஆரோபமில்லை என அபவாத இலக்கணம் கூறல்:

அரவன்று கயிரென்றாற் போலாளன்றுதறி யென்றாற்போல்
குரவன்சொல் லுபதேசத்தாற் கூறுநூலொளி யைக்கொண்டு
புரமன்று புவனமன்று பூதங்களன்று ஞானத்
திரமென்னும் பிரமமென்று தெளிவதே யபவாதங்காண்

அரவு (பாம்பு) அன்று, கயிறு என்றால் போல்; ஆளன்று தறி (மரம்) என்றாற் போல், குரவன் சொல்லும் உபதேசத்தால் கூறு நூல் ஒளியைக் கொண்டும் (ஆசாரியன் வாக்கியத்தையும் உறுதி செய்யும் ஞான சாஸ்திர நூல்கள் வலிமையை கொண்டும்) புரமன்று (சரீரம் அன்று) புவனமன்று (உலகங்கள் அன்று) பூதங்களன்று (பஞ்ச பூதங்கள் அன்று) ஞான ஸ்திரம் என்னும் பிரமம் என்று தெளிவதே அபவாதம் காண்.

47.
படமுநூ லும்போற் செய்த பணியும் பொன்னும் போற்பார்க்கில்
கடமுமண் ணும்போ லொன்றாங் காரிய கார ணங்கள்
உடன்முதற் சுபாவமீறா வொன்றிலொன் றுதித்த வாறே
அடைவினி லொடுக்கிக் காணப தபவாத வுபாயமாமே

காரிய காரணங்கள் பார்க்கில் (காரியமான சகசீவ பரத்தையும், காரணமாகிய பிரமத்தையும், உத்தியால் விசாரிக்குமிடத்து) படமும் (காரியமான துணியும்) [காரணமாகிய] நூலும் போல், செய்த பணியும் (காரியமான ஆபரணமும்) [காரணமாகிய] பொன்னும் போல், கடமும் (காரியமான குடமும்) [காரணமாகிய] மண்ணும் போல் ஒன்றாம். உடன் முதல் சுபாவம் ஈறாக (தூல தேகம் முதல் பிரகிருதி முடிய) ஒன்றில் ஒன்று உதித்தவாறே அடைவினில் (முறையே) ஒடுக்கிக் காண்பது அபவாத உபாயமாமே. (உத்தியாமே)



No comments: