Pages

Wednesday, February 18, 2009

மீள் பார்வை - மூன்று குணங்கள்



சரி சரி, லயத்திலேந்து பிறப்புன்னா அது எப்படி நடந்ததுன்னு கேட்கலாம்.
ஆ! அதுக்கு விடை இருக்கு. இப்படி நடந்ததுன்னு வேதத்திலே, புராணங்களிலே, பாகவதத்திலே எல்லாம் சொல்லி வெச்சு இருக்காங்க. சில வேறுபாடுகள் இருந்தாலும் பொதுவா சில வழிகளை அறிஞர்கள் ஒத்துக்கிறாங்க.

மூல ப்ரக்ருதியிலேந்து ஒரு கால கட்டத்திலே ஈஸ்வரனோட உள் நோக்கிய பார்வையாலே மூன்று குணங்கள் தனித்தனியா வெளிப்படும்.
இது முன் பதிவுகளிலே கொஞ்சம் குழப்பி இருக்க வாய்ப்பு இருக்கு. இங்கே சொல்கிற ஈசன் பின்னாலே வருகிற சத்துவ குண பாகமான ஈசன் இல்லை. குழம்பாம இருக்க இதை ப்ரம்மம் னே கூட வெச்சுக்கலாம். ஆனா அப்ப ப்ரம்மத்துக்குன்னு சங்கல்பம் உண்டான்னு எல்லாம் வாதம் பிறக்கும் என்கிறதாலே ஈஸ்வரன்னு சொல்கிறோம்.

இந்த 3 குணங்களைப்பத்தி முன்னேயே பாத்து இருக்கிறோம். சத்வம், ரஜஸ், தமஸ். இதை வெளுப்பு, சிவப்பு, கருப்புன்னு உருவகப்படுத்தி இருக்காங்க! வேற விதமா சுத்தம், அழுக்கு, இருட்டு என்கிறார்கள். தெளிஞ்ச தண்ணீர், கலங்கலான தண்ணீர், அழுக்கு தண்ணீர் மாதிரியும் சொல்கிறதுண்டு.
சத்துவம் சில விஷயங்களோட சம்பந்தப்பட்டது. சுத்தம், சாந்தம், ஜீவ காருண்யம், ஈஸ்வர பக்தி, மோக்ஷ நாட்டம், தெய்வ சிந்தனை. நுட்பம் - subtle- என்கிறது இதை குறிக்கும்ன்னு வெச்சுக்கலாம்.
ரஜஸ் - ஒரே வார்த்தை சொல்லனும்னா action. எல்லா உலக விஷயங்களிலும் அனுபவிப்பதிலும் நாட்டம் இருக்கும். துவேஷம், ரோஷம், சாதாரண கோபம், ஆசை இப்படி அடுக்கலாம். இதெல்லாமே ராஜஸ குணங்கள்.
தாமஸம்- தூங்கு மூஞ்சி,heavy, dull, lethargy, தன்னை மறந்த கோபம், அதிகமான ஊண் சாப்பிடறது, அதிக தூக்கம், கனம், அழுக்கு... புரியுதில்லை?

தியானம் செய்கிற ஆசாமி சத்வம்;
சுறு சுறுப்பா ஆக்ரோஷமா விளையாடுகிற ஆசாமி ராஜஸம்;
நல்லா சாப்பிட்டு தூங்கற ஆசாமி தாமசம்.

நண்பரை ¨என்னடா, இன்னிக்கு டல்லா இருக்கே¨ன்னு சில சமயம் கேக்கிறோம். இல்லை ¨என்ன அவ்வளோ சுறு சுறுப்பு இன்னிக்கு¨ என்கிறோம். நாமே சில நாள் சாந்தமா இருக்கிறோம்; சில சமயம் கோபமா இருக்கிறோம். சில சமயம் அழுது வடிகிறோம். ஒரே ஆசாமிதான்!
அதே போல
எல்லாருக்கும், எல்லாத்திலேயும் இந்த 3 குணங்களும் உண்டு. எந்த ஒரு நேரத்திலேயும் ஒவ்வொண்ணு அதிகமா இருக்கும்; குறைவா இருக்கும். அவ்வளவுதான். அதிகமா இருக்கிற விஷயத்தை வெச்சு அதை பேர் சொல்கிறோம்.

29.அதுதானெப்படி என்றக்கா லநாதியாஞ் சீவரெல்லாம்
பொதுவான சுழுத்திபோல பொருந்து மவ்வியந்தன்னில்
இதுகால தத்துவப் பேரீசனுட் பார்வையாலே
முதுமூல சுபாவம்விட்டு முக்குணம் வியத்தமாமே

அதுதான் (அக்கற்பனை) எப்படி [உண்டாயிற்று] என்றக்கால் (என கேட்பாயானால்) அநாதியாஞ் (ஆதியில்லாத)  சீவர் எல்லாம் பொதுவான  சுழுத்தி [அவஸ்தை] போல அவ்வியந்தன்னில்  (மூலப்பிரகிருதியில்) பொருந்தும் (கருமவாசனையுடன்அடங்கியிருக்கும்).  இது காலதத்துவப் பேர் [அடைந்து] ஈசன் உட்பார்வையாலே முது மூல (முன்னுள்ள பிரகிருதி) சுபாவம் விட்டு (தன்மை விட்டு) முக்குணம் வியத்தமாமே. (முக்குணங்களாய் வெளிப்படும்)

30.
அந்த முக்குணங்களின் பெயர் முதலியன:
உத்தம வெளுப்புச் செம்மை  யுரைத்திடு கறுப்பு மாகும்
சத்துவ குணத்தி னோடு ரசோகுணந் தமோகு ணந்தான்
சுத்தமோ  டழுக் கிருட்டாச் சொல்லுமுக் குணமு மூன்றாய்
ஒத்துள வேனுந் தம்மு ளொருகுண மதிகமாமே

உத்தம (முதலாவதாக) வெளுப்பு, செம்மை,  [அதமமாக] உரைத்திடும் கறுப்பும்
ஆகும். [முறையே] சத்துவ குணத்தினோடு, ரசோகுணம், தமோ குணந்தான் [அவற்றின்
பெயர்]. சுத்தமோடும், அழுக்கு (உடனும்), இருட்டாக[வும்] சொல்லும் [இந்த]
முக் குணமும் மூன்றாகி ஒத்துளவேனும் (ஒத்து இருப்பினும்) தம்முள்
(அவற்றுள்) ஒரு குணம் அதிகமாமே. (மேலானது)


7 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

தேவி பாகவதம் நினைவுக்கு வருகிறது. :-)

திவாண்ணா said...

மௌலி, இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்.ஏன்?

மெளலி (மதுரையம்பதி) said...

பரபிரம்மம் + லயம்/சக்தி - பராசக்தி/புவனேஸ்வரி என்பதாகப் போகும்.

இதில் பரபிரம்மம் - பரமசிவனாகவும், அதுவே இயக்க சக்தியாகையில் பராசக்தி என்றும் கூறுவர்.

(நீங்க இங்க லயம் என்பதற்கு வேற மாதிரிச் சொல்லியிருக்கீங்க...ஆகவே அது பற்றிச் சொல்லும் முன் இன்னொரு முறை இந்த இடுகையைப் படிக்கணும் நான் :-))

பராசக்தியின் மூன்று குணங்களே மும்மூர்த்திகள் என்றும் அவர்களைப் படைத்து அவர்களது ஜாப் டிஸ்கிரிப்ஷன் சொல்லிப் பதவியில் அமர்த்துபவள் அம்பிகை.

இதுபற்றிய தேவி பாகவத இடுகைகளுக்கான லின்க் கீழே!

http://maduraiyampathi.blogspot.com/2008/09/1-7.html

http://maduraiyampathi.blogspot.com/2008/10/2-8.html

http://maduraiyampathi.blogspot.com/2008/10/3-9.html

(அப்பாடி, என் ப்ளாக்கையும் அட்வர்டைஸ் பண்ணிக்க ஒரு சான்ஸ் கிடைச்சுடுத்து)
:-)

திவாண்ணா said...

முன்னமேயே படிச்சதுதானே அது!
முன்னம் சொல்லி இருக்கிறேன். சைவர்கள் சிவன் என்றும் சாக்தர்கள் சக்தியாகவும், வைணவர்கள் விஷ்ணுவாகவும் சொல்வது என்னவோ இதே பரப்ரம்மத்தையே! உள்ளே விஷயம் ஒண்ணுதான். பார்வை வேறு வேறு!

மெளலி (மதுரையம்பதி) said...

//முன்னமேயே படிச்சதுதானே அது!
முன்னம் சொல்லி இருக்கிறேன். சைவர்கள் சிவன் என்றும் சாக்தர்கள் சக்தியாகவும், வைணவர்கள் விஷ்ணுவாகவும் சொல்வது என்னவோ இதே பரப்ரம்மத்தையே! உள்ளே விஷயம் ஒண்ணுதான். பார்வை வேறு வேறு!//

உண்மைதான் திவாண்ணா...இந்த இடுகையில் நீங்க சொல்லியிருக்கும் மூன்று குணங்கள், அதன் தன்மையை த்ரிமூர்த்திகளுடன் ரிலேட் பண்ணிப் பார்த்தேன் அதான், தேவி பாகவதம் நினைவுக்கு வருதுன்னு சொன்னேன்.

Kavinaya said...

ம்.. புரியற மாதிரிதான் இருக்கு :)

திவாண்ணா said...

ம்ம்ம் நல்லது!