Pages

Monday, February 2, 2009

ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகள் - பஞ்ச ப்ராணன்கள்



சரி, அப்ப ரஜோ குணம்?
ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் கூடி இருந்து ப்ராணன் முதலான 5 வாயுக்களும் உண்டாகும்.
ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் பிரிந்து இருந்து கர்ம இந்திரியங்கள் உருவாகும்.

பிராணன் முதலான வாயுக்கள் 5.
கூட்டால உண்டானாலும் அந்த அந்த தன் மாத்திரையோட குணம் இருக்கும்ன்னு பாத்தோம் இல்லையா?

1.வியானன் - ஆகாயத்தின் ரஜோ குணத்தில பிறந்த இது ஆகாயம் எல்லா இடத்திலேயும் வியாபித்து இருக்கிறது போல உடம்பு முழுக்க வியாபித்து, ரத்தத்தை பரவ செய்து உடம்பை தாங்கி நிற்கும்.

2.பிராணன் - வாயுவோட ரஜோ குணத்தில உற்பத்தியானது. அதனால எப்போதும் உள்ளும் வெளியும் போய் வந்து கொண்டே இருக்கும். ஹ்ருதயத்திலே தங்கி எப்பவும் நகர்ந்து கொண்டு பசி, தாகம் இதையெல்லாம் உண்டாக்கும். இன்னும் சாப்பிடவே இல்லை; பசி பிராணன் போகிறது ன்னு கேட்டு இருக்கோம் இல்லையா? வெளியேந்து காற்றை உள் வாங்குகிறதும் இதுவே. மொத்தத்திலே மெடபாலிஸம் கவனிக்கறது முக்கியமா இதே.

3.அபானன் - நெருப்பின் ரஜோ குணம். அதோட ஒரு குணம் எதானாலும் சுத்தப்படுத்தறது இல்லையா? அதே போல இது மல ஜலாதிகளை வெளியே தள்ளி சுத்தப்படுத்திடும். மலச்சிக்கல் வராம இருக்க இது சரியா வேலை செய்யணும்.

4.சமானன் - நீர் தத்துவம். இதோட இடம் நாபி (தொப்புள்). நாம சாப்பிட்ட உணவு, குடிச்ச நீர் இதை எல்லாம் உள்வாங்கி செரிக்க வைக்கும். இது சரியா இல்லைனா அஜீரணம்தான், உடம்பு சரியா வளரவும் வளராது.

5.உதானன் மண்ணோட ரஜோ குணத்திலேந்து வந்தது. கண்டம் (தொண்டை) யிலே இருந்து காத்து உள்ளே வெளியே போவதை கட்டுப்படுத்தும். அதுதான் பேச்சுக்கு முக்கியம் இல்லையா?

இந்த அஞ்சு தவிர இன்னும் அஞ்சு உபவாயு இருக்குன்னு ஒரு பார்வை.
நாகன் - உடம்பை முறுக்கி ஆவ் ன்னு கொட்டாவி விடறப்ப இது வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கலாம்.
கூர்மன் -விக்கலும் ஏப்பமும் வந்தா இதோட வேலைன்னு அறிவோம்.
கிரிகரன் - ஹச் (இல்லைனா செல் போன் கம்பெனி இல்லை, தும்மல்) உண்டாக்கறது இது.
தேவதத்தன் - சிரிக்கிறப்பவும், சோகப்படறப்பவும் சினிமாவிலே கதாநாயகி அழுது மூக்கை சிந்தி போடறப்பவும் - இது சுறுசுறுப்பா இருக்கு.
தனஞ்செயன்- நம்ம பிராணன் போன பிறகு உடம்பிலே தங்கி இருந்து 5 ஆவது நாள்ல அதை வீங்கி வெடிக்கப்பண்ணுவது.

இந்த 5 உபவாயுக்களும் பிராண வாயுவோடா வெவ்வேற நிலைதான், அதனால வாயுக்கள் அஞ்சுதான் ன்னும் சொல்கிறாங்க.


4 comments:

Geetha Sambasivam said...

இது ஓகே, விஞ்ஞானப் பாடம் மாதிரி சுலபமாப் புரியுது. பார்க்கலாம், மண்டையில் ஏறுகிறதானு! :((((((((((

Kavinaya said...

படிக்கும்போது புரியற மாதிரி இருக்கு; ஆனா ஒண்ணும் நினைவில் நிக்க மாட்டேங்குது :(

குமரன் (Kumaran) said...

சத்வ குணத்திலிருந்து ஞானேந்திரியங்கள் என்றால் ரஜஸிலிருந்து தான் கர்மேந்திரியங்கள் என்று நினைத்துக் கொண்டே படித்தேன். சரி தான் போலிருக்கிறது. :-)

ஆக செயலை ஊக்குவிக்கும் ரஜோ குணத்தில் தன்மாத்திரைகள் சேரும் போது பஞ்ச பிராணன்களும் பஞ்ச கர்மேந்திரியங்களும் தோன்றுகின்றனவா? புரிந்தது போல் இருக்கிறது.

பஞ்ச பிராணன் என்று தனித்தனியாகச் சொன்னாலும் அவை எல்லாமும் ஒன்றாக ஒரே நிலையில் தானே உடலில் உயிர்க்காற்றாக இருக்கின்றது. அதனால் அது சமஸ்டி வடிவம் என்பதும் சரி என்று தோன்றுகிறது.

பஞ்ச பிராணன்களில் பெயர்களை அறிந்திருந்தேன். அவற்றின் செயல்களையும் படித்திருக்கிறேன். எந்த எந்த தன்மாத்திரைகளில் இருந்து எந்த எந்த பிராணன் தோன்றியது என்பதை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். இன்னொரு முறை படித்து முழுவதும் நினைவில் நிறுத்த முயலவேண்டும்.

உப பிராணன்களின் பெயர்களை வேறு இடத்திலும் படித்தது போல் நினைவு. கருடாழ்வாரின் திருமேனியில் இருக்கும் நாகங்களின் பெயர்களும் இவை தானே? இந்த உப பிராணன்களைத் தான் பஞ்ச நாகங்கள் என்று வேத ரூபியான கருடனின் திருமேனியில் வைத்துச் சொல்லியிருக்கிறார்களோ? இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திவாண்ணா said...

//சத்வ குணத்திலிருந்து ஞானேந்திரியங்கள் என்றால் ரஜஸிலிருந்து தான் கர்மேந்திரியங்கள் என்று நினைத்துக் கொண்டே படித்தேன். சரி தான் போலிருக்கிறது. :-)//

ஆமாம். ராஜஸம் னாலே ஆக்ஷன் . கர்ம இந்திரியங்களும் அதை ஊக்குவிக்கிற சக்திகளும் அதை ஒட்டினதுதானே!

//ஆக செயலை ஊக்குவிக்கும் ரஜோ குணத்தில் தன்மாத்திரைகள் சேரும் போது பஞ்ச பிராணன்களும் பஞ்ச கர்மேந்திரியங்களும் தோன்றுகின்றனவா? புரிந்தது போல் இருக்கிறது.//

சரிதான்.

//பஞ்ச பிராணன் என்று தனித்தனியாகச் சொன்னாலும் அவை எல்லாமும் ஒன்றாக ஒரே நிலையில் தானே உடலில் உயிர்க்காற்றாக இருக்கின்றது. அதனால் அது சமஸ்டி வடிவம் என்பதும் சரி என்று தோன்றுகிறது.//

ரைட்!

//இன்னொரு முறை படித்து முழுவதும் நினைவில் நிறுத்த முயலவேண்டும்.//
இந்த விஷயங்கள் எல்லாமே திருப்பி திருப்பி படித்து நினைவில் வைக்க வேண்டியவை; புரிந்ந்து கொள்ள வேண்டியவை.

//உப பிராணன்களின் பெயர்களை வேறு இடத்திலும் படித்தது போல் நினைவு. கருடாழ்வாரின் திருமேனியில் இருக்கும் நாகங்களின் பெயர்களும் இவை தானே? //

இது எனக்கு புதுசு குமரன். கண்டு பிடிச்சு பகிர்ந்து கொள்ளுங்க!