Pages

Monday, April 13, 2009

சிவோஹம்!



குடத்திலே ஒரு ஆகாசத்தைப்பார்க்கிறோம். அது வெறும் பிரதிபலிப்புதான் உண்மையில்லைன்னு நிச்சயமா நமக்குத்தெரியும். கொஞ்சம் அறிவியல் தெரிஞ்சவங்களுக்கும் பகல்லே பாக்கிற ஆகாசம் என்கிற வானம் பொய்தான்ன்னு தெரியும்.

கொஞ்சம் யோசிச்சுப்பாத்தா குடத்திலே இருக்கிற வெளியும் எங்கும் பரந்து இருக்கிற வெளியும் ஒண்ணேன்னு புரியும். அதாவது எங்கும் பரந்து இருக்கிற வெளியிலேந்து குடம் ன்னு ஒரு பொருள் செயற்கையா ஒரு வெளியை பிரிச்சுகாட்டுது. குடம் இல்லைனா அந்த வெளியும் தனியா இல்லை.
அது போல கூடஸ்தனும் பிரம்மமும் வேறு வேறு இல்லை. ஒண்ணே!
சிவோஹம் ன்னு சொல்கிறவங்க இதைத்தான் சொல்கிறாங்க.
சிவமே நான் நானே சிவம் ன்னு எல்லா காலத்திலேயும் பாவனை செய்யணும். இதுவே பிரம்ம அனுபூதியில் இருக்கிறது ஆகும்.

அகண்ட அறிவான பரசிவமே நானென்று
அனவரதம் இடையறவே செய்யுந் தியானம்
புகன்ற உபாசனையாகும் அதனால் உண்மை
பொருந்தியநல் புந்தியினால் பர சிவத்தை
நிகழ்ந்திடவே அறிந்திடலாம் மற்று ஒன்றாலும்
நிருமலமாய் அறியவொணாது ஆதலாலே
பகர்ந்த குரு வசனத்தால் பரசிவத்தை
பக்தியுடன் என்றும் உபாசிக்க வேண்டும்.
சின்மயமாம் சிவத்தினிடை சித்தம் வைத்து
சிவமதுவே நாம் என்று இங்கறியாதோர்க்கு
சன்மயமாம் பரப்பிரமந் தானே ஆகி
சலியாமல் இருப்பதுவாம் விதேக முத்தத்
தன்மை ஒரு காலத்தும் சித்தியாது
தத்துவமாய் நவில்கின்றேன் இனிதாகவென்றே
நின்மலமாய் ரிபு முனிவன் விதேக முத்தன்
நிலை பெற்ற இவ்விலக்கணமே நிகழ்த்தினானால். -ரிபு கீதை

இதை திடமா அறியனும்னா எத்தனை வேதங்களை படிச்சு ஆராய்ஞ்சாலும் உதாரணங்களை சொன்னாலும் புத்தி விசாரத்தாலும் இயலாது. அவை ஒரு மட்டத்துக்குத்தான் கொண்டு விடும். அதுக்கு மேலே போக முடியாது.

திடமான அனுபவம்தான் இதை நிச்சயமா அறிய ஒரே வழி!

82.
அத்வைத சொரூபத்தை அநுபவத்தில் அறிதல்:

கடநீரின் மேக நீரிற் கண்டவா னிரண்டும் பொய்யே
குடவானும் பெரிய வானுங் கூடியொன்றா மெப்போதும்
இடமான பிரமஞ்சாட்சி யிரண்டுமெப் போது மேகம்
திடமாகச் சுவாநு பூதி சிவோகமென் றிருந்தி டாயே

கடநீரில் (குடத்தில் உள்ள நீர்) மேக நீரில் கண்ட வான் இரண்டும் பொய்யே. குடவானும் (குடத்தில் உள்ள வானும்) பெரிய வானும் கூடி ஒன்றாம் எப்போதும். [அது போல] இடமான (வியாபகமான) பிரமம் சாட்சி (கூடஸ்தன்) இரண்டும் எப்போதும் ஏகம் (ஒன்று). திடமாக (துணிவாக) சுவாநு பூதி (உன்னநுபவத்தில்) சிவோகம் (சிவனே நான், நானே சிவன்) என்று இருந்திடாயே.



2 comments:

geethasmbsvm6 said...

கொஞ்சம் பரவாயில்லை, இது ஏற்கெனவே இந்த உதாரணங்கள் எல்லாம் கேட்டிருப்பதாலேயோ???

திவாண்ணா said...

இருக்கும்!
இல்லை எளிமையா சொல்ல நான் கத்துக்கிட்டேனோ என்னவோ? டூ லேட் இல்லை? :-))