Pages

Friday, December 25, 2015

கிறுக்கல்கள் - 72


ஏன் நிறைய பேர் ஞானம் அடையறதில்லை?”
ஏன்னா அவங்க உண்மையை தேடலை. எது வசதியா இருக்குமோ அதைத்தான் தேடறாங்க.”

இதுக்கு ஒரு சுஃபி கதை சொன்னார்.
ஒத்தருக்கு பணம் தேவையா இருந்தது. தன்கிட்ட இருந்த ஒரு தரைவிரிப்பை விற்க சந்தைக்குப்போனார். வியாபாரி ஒருத்தர் அதை பாத்துட்டு “இது ரொம்ப பழசா இருக்கு. ரொம்பவே சொர சொரப்பாவும் இருக்கு” ந்னு சொல்லி சல்லிசான விலைக்கு வாங்கினார். பணத்தை வாங்கிகிட்டு பத்தடி போறதுக்குள்ள இன்னொருத்தர் அதை பாத்துட்டு விசாரிச்சார். வியாபாரி “ இதப்போல தரைவிரிப்பு கிடைக்காது சார். சில்க் போல எவ்வளோ வழவழப்பா இருக்கு பாருங்க” என்றார்.
இதை எல்லாம் பாத்துக்கொண்டு இருந்த சுஃபி சொன்னார் “ ஓ, வியாபாரி, சொர சொரப்பான தரைவிரிப்பை சில்க் மாதிரி ஆக்கின மந்திரப்பெட்டியில என்னையும் வெச்சு எடேன்!”

மாஸ்டர் சொன்னார் மந்திரப்பெட்டி வேற எதுவும் இல்லை. நம்மோட சுயநலம்தான்!

No comments: