Pages

Monday, April 23, 2018

அந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை




சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறார் ஹாரீதர். சக்தி அற்றவனானால் பாத்திரத்தில் எள்ளை போட்டு இன்னொரு பாத்திரத்தில் செய்யலாம். ஆனால் மண் பாத்திரம் கூடாது. நிஷித்த காலமானாலும் அரிசி கலந்த ஜலத்தால் செய்யலாம்.
தேவர்களும் பித்ருக்களும் இந்த ஜல அஞ்சலியை விரும்புகிறார்கள். அதிகாரியாக உள்ளவர்கள் இதை செய்யாவிட்டால் நிராசையுடன் திரும்புகிறார்கள். இவர்களது சாபங்களுக்கு பாத்திரமாவான் எனக்கருத்து.
தேவ பூஜை
பூஜை செய்ய சா¢யான காலம் அவரவர் சாகையில் சொல்லப்பட்ட நித்ய கர்மாக்களை செய்து
அக்னிஹோத்ரம் முடித்த காலம். அதாவது ஸந்த்யாவந்தனம், ஔபாஸனம், ப்ரஹ்ம யக்ஞம், ஸூர்ய நமஸ்காரம் முடித்த பிறகு எங்கிறார் ஹாரீதர்.
விக்ஞானேஸ்வரர் மாத்யான்ஹிகத்தில் தர்ப்பணம் முடித்து, சந்தனம் புஷ்பம் அக்ஷதை ஆகியனவற்றை சேகரித்துக்கொண்டு அவரவர் பக்திக்கு தகுந்தபடி ப்ரஹ்மா விஷ்ணு சங்கரன் இவர்களுள் ஒருவரை வேத மந்திரங்களாலும் நான்காம் வேற்றுமையுடன் நம: நம: என்ற சப்தத்துடன் ஆஸனம் முதலிய உபசாரங்களுடன் பூஜிக்க வேண்டும் என்கிறார். ஆகவே காலையிலோ மாத்யான்ஹிக வேளையிலோ பூஜை செய்யலாம். ஸூர்யனிடத்தில் இருந்து ஆரோக்கியத்தையும் அக்னியிடமிருந்து செல்வத்தையும் சங்கரனிடமிருந்து ஞானத்தையும் விஷ்ணுவிடமிருந்து மோக்ஷத்தையும் வேண்டி பெற வேண்டும். தன் விருப்பப்படி ஒருவரையோ பலரையோ வைத்து பூஜை செய்யலாம்.

No comments: