Pages

Monday, April 9, 2018

ஆத்ம குணங்கள் 1





மனிதனாகப் பிறந்தவனோட நோக்கம்  இறைத்தன்மையை அடையறதா இருக்கணும். இதுக்கு பக்தி, கர்மம், யோகம், ஞானம்ன்னு பல வழிகள். நாம கடைபிடிக்கறது எந்த மார்க்கமா இருந்தாலும் சரி அது எல்லாம் கடைசில இந்த ஒரு இடத்திலத்தான் கொண்டு விடும். இன்னொரு பக்கமா பார்த்தா நீ எந்த வழியை வேணுமானாலும் பிடிச்சுக்கோ. நாத்திகனாக்கூட இரு. ஆனா இந்த இந்த குணங்களை சம்பாதிச்சுக்கோ என்கிறது மறை நூல்கள்.

கர்ம வழியிலே 40 சம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டு இருக்கு. அதுல முவ்வேழு யாகங்களும் அடக்கம். இது எல்லாத்தையும் சொன்னது எதுக்குன்னா மனசு நிர்மலமாகி - அழுக்கு நீங்கி-  இந்த ஆத்ம குணங்களை அடையணும் என்கிறதுதான்.

அந்த ஆறு குணங்கள் என்ன?

தயை, க்‌ஷமா, அநஸூயை, சௌசம், அநாயாஸம், மங்களம், அகார்பண்யம், அஸ்ப்ருஹா.
தயை, மங்களம் கேள்விப்ப்ட்டு இருப்போம். சௌசம் கூட கேள்விப்பட்டு இருக்கலாம். மத்தது பழக்கம் இல்லாத வார்த்தைகள். இது எல்லாம் என்னன்னு வரும் பதிவுகளில பார்க்கலாம்.


No comments: