Pages

Wednesday, April 11, 2018

ஆத்ம குணங்கள் - 3 - க்ஷமா





க்ஷமா அல்லது ஶாந்தி என்கிறது அடுத்தது.
சமூக வலைத்தளங்களில அடிக்கடி பார்க்கலாம். யாரானா நம்மைப்பத்தி எதாவது சொன்னா நமக்கு சுர்ர்ர்ர்ன்னு கோவம் வருது; திருப்பித்திட்டறோம். இது கூட பரவாயில்லை. தான் சார்ந்திருக்கற / ஆதரிக்கற கட்சி பத்தி தலைவன் பத்தி ஏதாவது யாரான சொல்லிட்டாலும் கோவம் வருது. லபோ திபோன்னு அடிச்சுக்கறோம்! இதுல நமக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லே!
நம்மை யாரும் திட்டினாலோ அடித்தாலோ மத்த வழிகளில தீங்கு செய்தாலோ அவங்க மேல கோபப்படாம பொறுமையா இருக்கறதுதான் க்ஷமா. இவற்றுக்கு மனசாலும் உடலாலும் வாயாலும் எதிர்வினை ஆற்றாம இருக்கறதுதான் க்ஷமா.
இப்படி இல்லாம ஏதோ ஒரு வகையில் எதிர்வினை ஆற்றுவது சாதாரண மனித குணம்.
அது சரி! எப்படி இந்த மாதிரி பொறுமையா இருக்கிறதுன்னா...

புத்தர் கதைன்னு ஒண்ணு சொல்லுவாங்க. ஒத்தன் புத்தரை திட்டு திட்டுன்னு திட்டித்தீத்தானாம். புத்தர் பொறுமையா இருந்துட்டார். அவனுக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு! மெதுவா ஏன் உங்களுக்கு கோவமே வரலைன்னு கேட்டான். புத்தர் சொன்னார்: தோ பார் நீ எனக்கு ஒரு பொருளை கொடுக்கறே. ஆயிரம் ரூபான்னு வெச்சிக்கோயேன். அதை நான் ஏத்துக்கலை; வேணாம்ன்னு சொல்லிட்டேன். அந்த பணம் யாருது?
இது என்ன கேள்வி? என்னுதுதான்.
அதேப்போலத்தான் நீ சொன்ன திட்டு எதையும் நா ஏத்துக்கலை!

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிறது தமிழ் முது மொழி. இதைத்தான் கர்மா தியரின்னு சொல்றாங்க. நாம் எதோ செஞ்சோம்; அதுக்கு எதிர்வினையாத்தான் இப்ப நமக்கு எதிரா ஏதோ நடக்குது. எய்தவனை விட்டுட்டு அம்பை நோவானேன்னு சொல்லுவாங்க இல்லையா? நாமத்தான் அம்பை போட்டோம். அது நம் மேலயே இப்ப பாயுது. அம்பை திட்டி இப்ப என்ன புண்ணியம்? இப்படி சரியா எடுத்துக்க பயிற்சி அவசியம். உணர்வு சார் நுண்ணறிவு பத்தி நான் எழுதினதை படிச்சு இருப்பீங்க. அதுதான் வேணும். என்ன படிக்கலையா? முதல்ல போய் படிங்க!

No comments: