Pages

Monday, April 16, 2018

ஆத்ம குணங்கள் - 6 - அநாயாஸம்





அநாயாஸம் ஐந்தாவது.
ஆயாஸம் கேள்விப்பட்டு இருக்கலாம். சோர்வு. இப்படி சோர்வாகாமல் இருக்கறது அநாயாஸம். ஜஸ்ட் லைக் தட் ஒரு பெரிய காரியத்தை செய்தவர்களைப்பத்தி அநாயாஸமா செஞ்சுட்டான் என்பதுண்டு.
பலரும் பசி தாகம் பாராம கடுமையா உழைச்சு ஒரு விஷயத்தை முடிக்கறதை பெருமையா நினைக்கிறாங்க. அப்படி செய்யக்கூடாது என்கிறது சாஸ்திரம். ஐடி துறையில ராப்பகலா வேலை செஞ்சு ஹார்ட் அட்டாக் வந்து டெஸ்கில சாஞ்ச கேஸ் பத்தி கேல்விப்பட்டு இருக்கேன். பொதுவா அப்படி செய்யக்கூடாதுன்னு எல்லாரும் ஒப்புக்கொண்டாலும் இன்னமும் நடக்கத்தான் நடக்கிறது! :(
சிலர் கடுமையான விரதங்கள் இருப்பாங்க. என்னதான் மயக்கம் போட்டாக்கூட விரதம்ன்னு சொல்லி சாப்பிடாம இருக்கறது, வேர்த்து விறு விறூக்க கை கால் சோர்ந்து போகும்படி வேலை செய்யறது, ஒரு காரியத்தை செய்ய தன் சக்திக்கு மீறி செலவு செய்யறது....
சாகிறது முன்னே எல்லாம் சுலபமான காரியமா இருந்தது. பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்பும் இருக்கத்தானே வேணும்? அப்படி இது ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்பல்லாம் அப்படி இல்லே. உடனே 108 ஐ கூப்பிடு; ஊரிலேயே இருக்கற பிரபல காஸ்ட்லி ஆஸ்பத்திரிக்குப்போ; என்ன செலவானாலும் பரவாயில்லை டாக்டர்.
சில பல நடுத்தர வசதி உள்ள குடும்பங்கள் இதால சீரழிஞ்சதை கேள்விப்பட்டு இருக்கேன். சேவையா இருந்த மருத்துவத்துறை வணிகமாகி பல வருஷங்கள் ஆயாச்சு. இப்ப இருக்கற நிலையில இந்த 'என்ன செலவானாலும் பரவாயில்லை' ன்னு காதுல விழுந்துட்டா காசு இனிமே தேறாதுன்னு ஸ்பஷ்டமா தெரியற வரை இழுத்தடிக்க முடியும். இத்தோட நிறுத்திக்கறேன். சொல்ல வந்தது சக்திக்கு மீறி எதையும் செய்யாதே.
தனக்குன்னு மட்டும் இல்லை; பிறருக்கு மிகுந்த சிரமங்களை தரும் காரியங்களையும் செய்யலாகாது.

No comments: