Pages

Friday, April 13, 2018

ஆத்ம குணங்கள் 5 - சௌசம்





நாலாவதா சௌசம். சரியா எழுத ஶௌசம். ஶுசியாக அதாவது சுத்தமாக இருத்தல். உடல் வாக்கு மனம் மூன்றுமே சுத்தமாக இருக்க வேண்டும்.
புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் இல்லையா?
இதில் நாட்டமுள்ளவர்கள் அடிக்கடி குளிப்பார்கள். எனக்கு நாளுக்கு 3 முறை குளிக்க வேண்டி இருக்கிறது. உண்ணும் உணவில் தூய்மையை பார்க்க வேண்டும். அசுத்தமான உணவு, உண்ணத்தகாதன, தீட்டானது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் பல் துலக்குவது, ஜல மலம் கழித்த பின் சுத்தம் செய்து கொள்வது, சொல்லப்பட்ட நேரங்களில் ஆசமனம் செய்வது, வாய் கொப்பளிப்பது, வீட்டுக்குள் நுழையும் முன்பே கால்களை சுத்தம் செய்து கொள்வது, அநாசாரமான இடத்துக்கு போகாமல் இருப்பது போன்ற பலதும் புறத்தூய்மை.
நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுமே உண்மையானதாக இருக்க வேண்டும். மங்கலமானதாக இருக்க வேண்டும். கடும் சொற்களை சொல்லலாகாது. பிறரை திட்டக்கூடாது. எல்லோருக்கும் ப்ரியமானதையும் ஹிதமானதையுமே பேச வேண்டும்.
பிறருக்கு தீங்கை மனதாலும் நினையாதிருக்க வேண்டும். மனதாலும் பிறர் பொருளை அனுபவிக்கக்கூடாது. ஒரு பொருளை வாங்க நேர்ந்தால் அதற்கான விலையை கொடுத்துவிட வேண்டும். கடனாக வாங்குவதை குறித்த நேரத்தில் திருப்பிக்கொடுத்து விட வேண்டும். அக்கிரமமான வழியிலோ பிறரை ஏமாற்றியோ பணம் சம்பாதிக்கக்கூடாது. இன்று பரவலாக காணும் விளம்பரங்கள் என்ன செய்கின்றன?
பொதுக்காரியத்துக்காக வஸூல் செய்ததை உரிய கணக்குடன் வெளிப்படுத்த வேண்டும். அதை எக்காரணம் கொண்டும் தனக்கு பயன்படுத்தக்கூடாது.

No comments: