Pages

Sunday, April 22, 2018

திருமணம்




விஷயம் தெரிஞ்சுக்கறதுல பெரிய பிரச்சினை இருக்கு! மாறா நடக்கறப்ப கஷ்டமா இருக்கும். சில மாதங்களாவே கல்யாணம் கார்த்தின்னு போறதை தவிர்த்துட்டேன். அங்க நடக்கற விஷயங்கள் சங்கடமா இருக்கு! இன்னைக்கு காலை ஒரு திருமணம். வரலைன்னுதான் சொன்னேன். வூட்டம்மிணி அதெல்லாம் கெடயாது; போய்த்தான் ஆகணும்ன்னு பிடிவாதம். முன்னேயாவது கொஞ்சம் மறுக்கறது கஷ்டம்; இப்பத்தான் நல்ல எஸ்க்யூஸ் இருக்கேன்னு சொல்லியும் கேட்கலை.

முன்ன்ன்ன்னே ப்ரொசீஜர் சொல்லவும் நடத்தி வைக்கவும்தான் வைதீகர். மாப்பிள்ளைக்கே மந்திரம் தெரியும். இப்பல்லாம் அதுக்கு சான்ஸே இல்லை என்கிறதால வாத்தியார் சொல்லி வெச்சு கர்மா நடக்கிறது. 30- 40 வருஷம் முன்னேயாவது பரவாயில்லை. 'மம' ன்னு சொல்லிக்கோங்கோ ன்னு சொல்வார். இப்பல்லாம் அதுவும் இல்லை. வாத்தியாரே 'மம தர்ம பத்னியா ஸஹ' ன்னு சொல்லிடறார். அவரா செய்யறார்? இல்லை அவரோட தர்ம பத்னி இன்வால்வ் ஆறாங்களா? எல்லாம் அனர்த்தமா போயிண்டு இருக்கு!

இப்ப லேடஸ்ட் புரோகிதர் மைக்ல மந்திரம் சொல்லறது! ஒரு மந்திரத்தை உத்து கேட்டா மனசில அது ரிபீட் ஆகாம இராது. திருமண நேரத்தில இப்படி பலர் சொல்லறது அபத்தம் இல்லையா?
விழாவில வாத்தியம் வாசிக்கறதுக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கும்ன்னு தோணறது! கிட்டே இருக்கறவங்க காதுல மட்டும் விழட்டும்; மாப்பிள்ளை மட்டும் திருப்பிச்சொல்லட்டும். மத்தவங்களுக்கு வாத்திய சப்தத்திலே காதுல விழாம இருக்கட்டும்! மைக்கிலே சொல்லறப்ப இது எல்லாம் வ்யக்தமா போச்சு. போதாததுக்கு மந்திரங்கள் சொல்லும் போது அரங்கத்தில இருந்த நாதஸ்வர க்ரூப்பை சைகை காட்டி நிறுத்துன்னு சொல்லிட்டாங்க!

எந்த ஹோமத்துக்கும் ஹோமகுண்டத்துக்கும் பூமிக்கு சம்பந்தம் இருக்கணும். அப்படி இல்லாம ஹோமம் செய்யறதுல பலன் இல்லை. இப்ப கட்டுற பல கல்யாண மண்டபங்களில கீழே டைனிங். முதல் மாடிக்கு கார் போறா மாதிரி ராம்ப் போட்டு அங்கேதான் கல்யாணம். இதுல பூமி சம்பந்தம் போயிடும்.

முதன் முதல்ல சுமார் 20 வருஷங்கள் முன்னே ஒரு இனிஷியேடிவ் எடுத்து 'தாலி கட்டின உடனே எல்லாரும் கவரைத்தூக்கிண்டு கை குலக்க வர வேணாம். ஸப்தபதிதான் கல்யாணத்தை உறுதி செய்யறது. மாங்கல்ய தாரணம் இல்லே. ப்ரொசீஜர் முடியற வரைக்கும் காத்திருக்கவும். இவங்களே கீழே இறங்கி வருவாங்க'ன்னு சொல்ல ஏற்பாடு பண்ணினேன். அது நல்லா நடந்துது. ஆச்சரியமா அது எப்படி பரவித்துன்னே தெரியலை. என்னைப்போல இனும் சிலரும் யோசிச்சு இருக்கலாம். இப்பல்லாம் தவறாம அது போல அறிவிப்பு இருக்கு! இன்னைக்கு பொண்ணு பிள்ளைகள் கை குலுக்க வேணாம். அவா அப்பாக்கள்தானே செலவு செய்யறா? இவங்க தலையில் அட்சதையை போட்டுட்டு அவங்க கையில் கவரை கொடுங்கன்னு சொன்னாங்க! பரவாயில்லை.

No comments: