Pages

Thursday, August 12, 2010

ஈசன் -ஜீவன்



तत्र निरतशयं सर्वज्ञ्यबीजम् ।।25।।

தத்ர நிரதஶயம் ° ஸர்வஜ்ஞ்ய பீ³ஜம் || 25||

எல்லாவற்றையும் அறிந்திருப்பதற்கு (ஞானத்திற்கு) காரணமான அறிவின் உயர்வு-தாழ்வு தன்மை ஈஸ்வரனிடத்தில் முடிவற்றதாகிறது. (நிரதிசயம்).
உலகத்திலே மக்கள் ஒருவரை விட ஒருவர் அறிவு அதிகமுள்ளவர் குறைவுள்ளவர் என்று உள்ளது. ஆனால் ஈஸ்வரனுடைய அறிவு எதனுடனும் ஒப்பிடமுடியாதது.
ஈஸ்வரன் சர்வக்ஞன், தயை உள்ளவன். அப்படியானால் ஜீவர்களை ஏற்றத்தாழ்வுடன் படைப்பானேன் என்று கேள்வி எழும். ஒரு குயவன் பானை செய்ய முக்கியம். மண்ணும் முக்கியம். குயவன் என்னத்தான் கெட்டிக்காரனாக இருந்தாலும் மண் நன்றாக இல்லையானால் பானை நன்றாக இராது. மண்ணை பிசையும் நீர் உப்பு நீராக இருந்தால் பானை சரியாக வராது. அது போல ஈஸ்வரன் சிருஷ்டிக்கு காரணம் ஆனாலும் அந்த அந்த ஜீவனின் முன் பிறவியில் சம்பாதித்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே பிறவியை தருவார். (இப்படி ஈஸ்வரன் சிருஷ்டிக்கு நிமித்த காரணம் மட்டுமே என்பர்.) பின்னே தயை எங்கே வந்தது என்றால் சாஸ்திரங்களை கொடுத்து இருக்கிறார். அதன் மூலம் வைராக்கியமும் தன்னிடம் பக்தியும் ஏற்பட்டு உபாசிக்கிறவர்களுக்கு பிரகிருதியின் பந்தத்தை நீக்கி கைவல்யம் அளிப்பார்.


1 comment:

R.DEVARAJAN said...

तत्र निरतिशयम् सर्वज्ञबीजम् |

இது சரியா இருக்குன்னு நினைக்கறேன்.
Itranslator 2003 உபயோகிக்கலாம்

தேவ்