Pages

Thursday, August 19, 2010

சித்தத்தின் சலன தன்மையுடன் உண்டாகின்றவை.



दुःखदौर्मनस्याङ्गमेजयत्वश्वासप्रश्वासा विक्षेपसहभुवः ।।31।।

து³​:க² தௌ³ர் மநஸ்யாங்க³மே ஜயத் வஶ்வாஸப்ரஶ்வாஸா விக்ஷேப ஸஹபு⁴வ​: || 31||

துக்கம், (ஆத்யாத்மிக, ஆதி பௌதிக ஆதி ஸத்விக துன்பங்கள்.)
தௌர் மநஸ்ய =ஆவலுக்கு தடையேற்பட்ட காலத்தில் மனதில் உண்டாகும் கலக்கமும்.
அங்க³மே ஜயத்வ = சரீரத்தின் அவயங்களின் ஆட்டமும்
ஶ்வாஸ = இஷ்டமில்லாவிட்டாலும் வெளிக்காற்று உள் செல்லுதலும்
ப்ரஶ்வாஸா = இஷ்டமில்லாவிட்டாலும் உள் காற்று வெளி செல்லுதலும்
ஆகிய இந்த நான்கும் சித்தத்தின் சலன தன்மையுடன் உண்டாகின்றவை.
இந்த விக்கினங்களை தவிர்க்க நல்ல உபாயம் பிரணவம் முதலான மஹா மந்திர ஜபங்களும், இவற்றின் பொருளான பரமாத்மாவை மனதில் இருத்துவதும்தான்.

No comments: