Pages

Tuesday, August 31, 2010

ஸம்யமம்




  विषयवती वा प्रवृत्तिरुत्पन्ना स्थतिनिबन्धिनी ।।35।।
 விஷயவதீ வா ப்ரவ்ரு«த்திருத்பந்நா ஸ்த²திநிப³ந்தி⁴நீ || 35|| 


யோக சாஸ்திரங்களில் சொல்லிய விஷயங்களில் பிரவ்ருத்தியை உண்டான மனது தெளிந்த நிலைக்கு சாதனமாகிறது.

தாரணை, த்யானம், ஸமாதி மூன்றுக்குமே ஸம்யமம் எனப்பொதுப் பெயர். இவற்றை எவ்விடத்தில் வைத்து பயிற்சி செய்தால் என்ன பிரவ்ருத்தி (ஈடுபாடு) ஏற்படுகிறது என்பது இருக்கிறது. மூக்கின் நுனியில் சித்தத்தை வைத்து சம்யமம் செய்ய திவ்ய வாசனை அனுபவம் ஏற்படும்;  நாக்கின் நுனியில் வைக்க ருசி அனுபவம்; உள் மோவாய்க் கட்டையில் ரூபம். நாக்கின் நடுவில் தொடுதல்; நாக்கின் மூலத்தில் சப்தம். இப்படி ஒவ்வொரு இடத்தில் பிரவ்ருத்தி ஏற்பட்டு அங்கே சித்தம் நிலைபெறுகிறது.
சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் செல்ல சந்தேகங்கள் நீங்கும். சந்தேகமும் பயமும் நீங்க சாஸ்திரங்கள் உபதேசித்த விவேகம் –க்யாதி முதலியவற்றின் பலனில் நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கை அந்த வழியில் திடமான பிரவ்ருத்தியை உண்டாக்கும்.

வேறு உபாயங்களும் உண்டு.

No comments: