Pages

Thursday, September 9, 2010

நிர்விதர்க்க ஸமாதி



स्मृतिपरिशुद्धौ स्वरूपशून्येवार्थमात्रनिर्भासा निर्वितर्का ।।43।।

ஸ்ம்ரு«தி பரிஶுத்³தௌ⁴ ஸ்வரூப ஶூந்யே வார்த² மாத்ர நிர்பா⁴ஸா நிர்விதர்கா || 43||

சங்கேதம் (குறிப்பு) என்ற சக்தி-ஞானம் விலகியபோது ஸமாதி பிரக்ஞையானது தனக்குரிய க்ராஹகத்வம் என்ற பிரக்ஞா ரூபத்தால் இல்லாதது போல ஆகி, அபேதமற்ற பசு முதலிய க்ராஹ்யத்தோடு (அர்த்தத்தோடு) மட்டும் பிரகாசிக்கின்ற ஸமாதியானது நிர்விதர்க்க ஸமாதி எனப்படுகிறது.
எளிமையாக சொல்ல: நினைப்பில் சுத்தி ஏற்பட்டு சுய ரூபத்தில் உள்ளபோது வேறுபாடில்லாமல் பொருள் மட்டுமே உணரப்படும்போது அது நிர்விதர்க்கம் ஆகும்.
ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் இறைவன் ஒருவித குறிப்பை உலகை படைக்கும்போதே ஏற்படுத்தி உள்ளார். சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் அவற்றை ஒன்றாக அறிவதற்கு சங்கேதம் என்ற சக்தி காரணமாகும். இது இல்லாதபோது பொருள் மட்டுமே தோற்றத்தை அடைந்து நிற்கும். இந்த ஸமாதி நிர்விதர்க்க ஸமாதி. (இந்த சங்கேதம் இருக்கும்போது அது ஸவிதர்க்க சமாதி; நேற்று பார்த்தோம் இல்லையா?)

மேற்கண்ட இரண்டும் ஸ்தூல விஷயமான ஸமாதியை விளக்குகின்றன.

No comments: