Pages

Tuesday, September 28, 2010

அவித்தையின் சொரூபம்:




अनित्याशुचिदुःखानात्मसु नित्यशुचिसुखात्मख्यातिरविद्या ।।5।।

அநித்யாஶுசி து³:கா²நாத்மஸு நித்ய ஶுசி ஸுகா²த்மக்²யாதிரவித்³யா || 5|| 

அநித்தியமாகவும் அசுத்தமாகவும் துக்கமாகவும் அனாத்மாவாகவும் உள்ளவற்றில் நித்தியம், சுத்தம், சுகம், ஆத்மா ஆகியவற்றை காண்பதே அவித்யா.

இந்த உலகம் அநித்தியம். என்றோ ஒரு நாள் அழியும். தேவர்களாயினும் ஒரு நாள் புண்யங்களை அனுபவித்து தீர்த்தபின் மீண்டும் மனித ஜன்மம் எடுக்க வேண்டும். இப்படி எண்ணாமல் உலகம் என்றும் இருக்கும், நித்தியம் என்றும்; அல்லது யாகங்கள் செய்து தேவனானால் நித்தியமாக சுகமாக இருக்கலாம் என்று எண்ணியும் வருவது அவித்தை. நம் உடம்பையும் புலன்களையும்தான் ஆத்மா என்று எண்ணுகிறோம். இதுவும் அவித்தை காரணமாகவே.
இதே போல யாருக்கோ ஏற்படும் சுக துக்கங்களை நமதாக எண்னுகிறோம். கிரிக்கெட் மாட்ச் பார்க்கும்போது ஒரு அணி ஜெயித்தால் சந்தோஷப்படுகிறோம். வேறு அணி ஜெயித்தால் துக்கப்படுகிறோம். சினிமாவில் கதாநாயகி படும் கஷ்டங்களை நமதாக நினைத்து அழுகிறோம். வில்லனைப்பார்த்து கோபப்படுகிறோம். ஏன் வாழ்க்கையிலேயே நம் குடும்பத்தினர் சுக துக்கங்களை நமதாக எண்ணுகிறோம். இதுவும் அவித்தையே.

No comments: