Pages

Saturday, September 18, 2010

வ்யுத்தான சம்ஸ்காரத்துக்கு தடை..



तज्जः संस्कारोऽन्यसंस्कारप्रतिबन्धी ।।50।।

தஜ்ஜ: ஸம்°ஸ்காரோ'ந்ய ஸம்°ஸ்கார ப்ரதிப³ந்தீ⁴ || 50||

தஜ்ஜ: ஸம்°ஸ்காரோ அந்ய ஸம்°ஸ்கார ப்ரதிப³ந்தீ⁴

மேற்கூறிய ருதம்பரா பிரக்ஞையால் உண்டான நிரோத சம்ஸ்காரமானது வேறு வ்யுத்தான சம்ஸ்காரத்துக்கு தடை செய்வதாக ஆகிறது.

வெளியில் உள்ள சப்தம் முதலான விஷயங்களையே சித்தம் பற்றி செல்கிறது. இது பல ஜன்ம பழக்கம் ஆகும். இது வ்யுத்தான சம்ஸ்காரம் எனப்படும். தத்துவ பழக்கம் பெற வைராக்கியம் முதலான சாதனங்கள் உள்ளன. இந்த தத்வ பழக்கம் இதை தடை செய்யும். ருதம்பரா பிரக்ஞா ஏற்படில் இது முழுதும் தடை செய்யப்பட்டதாகும். அவித்தை முதலிய க்லேசங்கள் குறைந்து சித்தம் விவேக க்யாதியை அடைந்து செய்ய வேண்டிய காரியம் ஏதுமில்லாததாய் காரணத்தில் லயம் அடைந்து விடும். இந்த நிலையில் யோகியின் சித்தம் தன் காரியம் என்று எதையும் செய்ய சக்தி இல்லாமல் ஆகிவிடுகிறது. இப்படி.....


No comments: