Pages

Friday, September 24, 2010

க்லேசங்களின் குணம்:



முந்தையது சின்னதாக போனதால் இந்த பதிவு கொஞ்சம் பெரியது. :-))

अविद्या क्षेत्रमुत्तरेषां प्रसुप्ततनुविच्छिन्नोदाराणाम् ।।4।।

அவித்³யா க்ஷேத்ரமுத்தரேஷாம்° ப்ரஸுப்ததநுவிச்சி²ந்நோதா³ராணாம் || 4|| 

ப்ரஸுப்தம், தனு, விச்சின்னம், உதாரம் என ஒவ்வொன்றிலும் 4 பிரிவுகளை உடைய அவித்யைக்கு அதன் மேல் உள்ள மற்ற அஸ்மிதா, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகியவற்றுக்கு அவித்யை உற்பத்தி ஸ்தானம் ஆகிறது.
அவித்யை முதல் க்லேசம். இதுவே பின் வரும் க்லேசங்களுக்கு மூலமாக இருக்கிறது. இதில் 4 பரிமாணங்கள் –அவஸ்தைகள்- உண்டு.


சில விஷயங்கள் கண் காது முதலிய புலன்களுக்கு பிடிபடாது. அப்படி ஒரு உருவத்துடன் உள்ளது   ப்ரஸுப்தாவஸ்தை.
அடுத்து சிலது புலன்களுக்கு பிடிபடும். ஆனாலும் ஒரு காரியத்தை செய்ய வேண்டிய காரணம் - முகாந்திரம் ஏதும் இல்லாததால் சும்மா இருக்கும். இந்து தனு அவஸ்தை.
ஆனால் அப்படி செய்ய விடாமல் ஏதோ பலமான தடை இருக்கிறதால் செயலில் இல்லை. இப்படிப்பட்டது விச்சேத அவஸ்தை.
புலன்களுக்கு பிடிபடும்; தான் தன் காரியத்தை நடத்த மத்த எதன் உதவியும் தேவையில்லை. அது தன் காரியத்தை தடை ஏதுமின்றி நடத்தும். இது உதார அவஸ்தை.
இந்த நான்கு பரிணாமங்களும் -அவஸ்தைகளும் - அவித்தை முதலான எல்லா க்லேசங்களுக்குமே உண்டு.
அவித்தை இல்லாமல் மற்ற க்லேசங்கள் உருவாக மாட்டா. அதனால்தான் அவித்தை க்ஷேத்திரம் அல்லது பிரசவ பூமி எனப்படும்.
ப்ரஸுப்தாவஸ்தையும் தனுவும் புலன்களுக்கு பிடிபடாதாகையால் ஸூக்ஷ்மமானவை. விச்சேதாவஸ்தாவும் உதாராவஸ்தாவும் வெளிப்படையாக ஸ்தூலமாக தெரியும்.

ப்ரக்ருதி லயம் அடைந்தவருக்கு எல்லா க்லேசங்களுமே ப்ரஸூப்தங்களாவே இருக்கும். அதாவது மறைந்து இருக்கும்; வெளிப்படாது.
யோகம் பயில்வோருக்கு க்லேசங்களை விரோதமாக பாவிப்பதால் இவை தனுவாக இருக்கும். அதாவது வெளிப்பட காரணம் வாய்பு இல்லாமல் சும்மாயிருக்கும்.
சாதாரணமாக க்லேசங்கள் விருத்தியாகி வலுப்பட்டு ப்ரஸுப்தா தனுவாகி, அது விச்சின்னமாகி பின் உதாரமும் ஆகும். அதாவது முழுமையாக வெளிப்படும். ஸ்தூலமாகி விட்ட அவஸ்தையை சுத்த சத்வகுணத்தில் பகவானின் த்யானத்தால் போக்கிக்கொள்ளலாம். வளர்ந்துவிட்ட இவற்றை சித்த நிரோதத்தால் போக்க முடியாது. ஸூக்ஷ்மமான அவஸ்தைகளை சித்த நிரோதத்தால் போக்கலாம்.
உதாரணமாக ராகத்தையும் (ஆசையையும்) அதன் விளைவான க்ரோதத்தையும் செயலுக்கு வந்த பின் பகவானை வேண்டியே போக்கிக்கொள்ள வேண்டும். இவை ஸூக்ஷ்மமாக இருந்து முளை விடும் காலத்துக்கு முன்பே சித்தத்தை கட்டுப்படுத்தி பயிற்சியால் போக்கடிக்கலாம்.

No comments: