Pages

Friday, August 5, 2011

தேவர்கள் மனிதர்கள் - ௨



உரத்த சிந்தனை:

ம்ம்ம் இப்படி ஒரு காலத்துல தேவர்களுக்கு சமமா இருந்தாங்கன்னு சொல்கிறதால தேவர்கள் மட்டம் இல்லை. பாருங்களேன்... பூமி ஒரு இன்ச் விரிசல் விடுது. அதனால சுனாமியே ஏற்படுது! வீட்டில ஏசி போட்டுக்கிட்டு அவஸ்தை படறோம். பத்து நிமிஷ மழை ஊருக்கே ஏசி போடுது. இயற்கையில் தேவர்கள் சக்தி அளக்க முடியாதது.
ஒரு குட்டி தேவதையை ஜப தபங்களால் வசப்படுத்திகொண்டாக்கூட போதும்; அதுகிட்ட ஒரு பொருளை கொடுத்து மறைய வைக்க முடியுது. அதுகிட்ட கொடுத்து பின்னால வாங்கி மாஜிக் காட்ட முடியுது.
ஆமாம். பெரிய லிஸ்டே இருக்கு, இந்த தேவர்கள், தேவதைகள் பத்தி. ஊர் கோவிலில் பல தேவதைகள் இருக்கும். அங்கே இருக்கிற ஒவ்வொரு தூண் சிற்பத்திலும். மேலே போட்டிருக்கிற கல் தளங்கள் , போல எல்லாவத்திலும்.
தேவதைகளிலே உக்கிரமா இருக்கிற தேவதை, ஸௌம்யமா இருக்கிற தேவதைன்னு உண்டு.
உக்கிர தேவதைகள் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமா கோவில்ல இருக்கும்.

இந்திரன் முதல் இப்படி ஊர் தேவதை வரை இருக்கிற இந்த ஏராளமான தேவர்கள் தேவதைகளிலே நமக்குன்னு சிலது இருக்கும். அதை குல தெய்வம்ன்னு சொல்வாங்க. யாருக்கு பூஜைகள் செய்யரோமோ இல்லையோ இவங்களுக்கு தவறாம செய்யணும். எப்படி பணம் கொடுக்க கோர்ட் உத்திரவு போட்டாலும் கடைசிலே கவுண்டர் ஆசாமி தயவு வேண்டி இருக்கோ அப்படி என்னதான் நமக்குன்னு விதிச்சு இருந்தாலும் எல்லாமும் இந்த குல தெய்வம் வழியாகவே கிடைக்கணும். வருஷம் ஒரு முறையாவது குல தெய்வத்தை பாத்துட்டு வரணும்.

உரத்த சிந்தனையா இருக்கிறதுல எங்கேயோ போயிட்டேன்.

ஒரு காலத்துல மனிதன் சக்தி தேவர்களுக்கு அதிகமா இல்லாட்டாக் கூட சமமா இருந்து இருக்கு. தபஸ் பண்ண முனிவர்கள் ரிஷிகள் வம்பு பண்ண தேவர்களுக்கு சாபம் கொடுத்து வலு இல்லாம செஞ்சு இருக்காங்க. அப்படி இருந்தவங்க எப்படி இப்படி ஆயிட்டோம்?

நாம் பார்க்கிறது எவலூஷன் இல்லை. நேர்மாறான திசையில் போயிட்டு இருக்கோம் ன்னு தோன்றுகிறது அப்பப்ப. அஞ்சு தலை முறை முன்ன இருந்தவங்களோட நினைவாற்றல் இப்ப இல்லை. ராமாயணம் மகாபாரதம் எல்லாம் ஒரு சாதாரண கிராமவாசி ஒப்பிக்க முடிஞ்சது. நாலு வேதம் ஒத்தர் கத்துக்கொண்டு பாடம் சொல்ல முடிஞ்சது. இப்ப நாலு செய்யும் பாடம் பண்ண முடியலை.

ஜெய்பூர்ல பிரதாப்சிம்மன் போட்டு இருந்த கவசங்கள் இருக்காம். அதை இப்ப தூக்க நாலு ஆளு வேண்டி இருக்காம். என்ன பலம்? அந்த காலத்துல அவர் இதை போட்டுக்கிட்டு சண்டை வேற போட்டு இருக்கார்!
ரைவத நாட்டை ஆண்டு வந்த அரசன் ரைவதன் என்பவருடைய மகள் ரேவதி. ரைவதன் இவளை யாருக்கு கல்யாணம் செய்து கொடுக்கலாம்ன்னு யோசனை பண்ணி பண்ணி சரியா முடிவுக்கு வர முடியாம யோசனை கேட்க பிரம்மதேவர்கிட்ட போனாராம். அவரோ பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தாதால டிஸ்டர்ப் பண்ணாம கொஞ்ச நேரம் காத்திருந்தாங்க. பிரம்மா கண் முழிச்சதும் கேட்க, அடடா, நீங்க இங்க காத்து இருந்த நேரம் பூ லோகத்துல யுகமே மாறியாச்சு. சரி யார் இவளை தொடும் போது இவள் சாதாரண உயரமாக மாறுவாளோ அவருக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு சொன்னார்.
புரியலை.
திருப்பி நாட்டுக்கு வந்து பாத்தா எல்லாம் மாறியாச்சு! இப்ப பார்க்கிற மனுஷங்க எல்லாம் 'குள்ளமா' ஆறடிக்குத்தான் இருக்காங்க. கடைசில பலராமர் இவளை தொட அவள் உயரம் குறைந்து போய்விட்டாள். சரி இவன்தான் மாப்பிள்ளை என்று தீர்மானம் செய்து கொண்டு கல்யாணம் பண்ணி வைத்தார் ரைவதர்.
யுகம் மாற மனிதனோட உடம்பே மாறி இருக்கு!
தேக பலம்., மனோ பலம் எல்லாமும்தான் மாறி இருக்கணும்!
இப்படி க்ஷீணமா போயிட்ட நாம் இப்ப தேவர்களை அண்டிதான் காரியம் சாதிக்க வேண்டி இருக்கிறது.
(இன்னும் வரும்)

2 comments:

Geetha Sambasivam said...

ஜெய்பூர்ல பிரதாப்சிம்மன் போட்டு இருந்த கவசங்கள் இருக்காம். அதை இப்ப தூக்க நாலு ஆளு வேண்டி இருக்காம். என்ன பலம்? அந்த காலத்துல அவர் இதை போட்டுக்கிட்டு சண்டை வேற போட்டு இருக்கார்!//

ஆமாம், அதிலும் அந்த ராஜ உடை! அதைப் பார்த்தால் ஆச்சரியம் தாங்காது. உண்மையிலேயே இவ்வளவு உயரத்தோடும், வலுவோடும் இருந்திருப்பாரானு ஆச்சரியமாத் தான் இருக்கும். பொதுவாகவே ராஜஸ்தானியர்கள் அதீத உயரத்தோடு இருக்கின்றனர். ஏழரை உயரம் கூட இருக்கிறார்கள்.

//கடைசில பலராமர் இவளை தொட அவள் உயரம் குறைந்து போய்விட்டாள்.//

இது புதுசு, முடிந்தால் விளக்கவும்.

திவாண்ணா said...

இது புதுசு, முடிந்தால் விளக்கவும்.//
விளக்க என்ன இருக்கு? :-)
கதையைதான் எழுதியாச்சே!
ஒழுங்கா அமர சித்ர கதா படிக்கணும்....:-)))))