Pages

Monday, August 29, 2011

ஹோமங்கள்


அக்னிஹோத்ரிகள் காணாம போய்க்கொண்டு இருக்கிற இந்த காலத்திலே அடுத்த சாய்ஸ் என்ன?
அடுத்த சாய்ஸ் ஹோமங்கள்தான்.

பாவங்களை தொலைக்க வேதத்திலே சொன்னது கூஶ்மாண்ட ஹோமம். கூஷ்மாண்டம் ன்னா சம்ஸ்க்ருதத்திலே பூசனிக்காய். இது அந்த விஷயம் இல்லை. ஸ்பெல்லிங் வேற. தமிழ்ல சரியா எழுத முடியாது. ஔபாசனம் செய்யக்கூடியவங்க இதை அந்த அக்னியிலே செய்யலாம்.

பொதுவா நாம் பார்க்கிற ஹோமங்களில பாரம்பரியமா இரண்டு வகை.

வைதீக முறை ஒண்ணு. தாந்த்ரிக முறை ஒண்ணு.

இப்பல்லாம் ரெண்டும் கெட்டானா மூணாவதா இரண்டையும் கலந்துகட்டி புதுசு புதுசா பலர் செய்ய ஆரம்பிச்சு இருக்காங்க. அதாவது வைதீகமா ஆரம்பிச்சு முடிக்கிறது. ஹோம மந்திரங்களை இஷ்டத்துக்கு மாத்திக்கறது. அப்புறம் எப்படி ரெண்டையும் சம்புடிதம் பண்ணேன் பாத்தீங்களா ன்னு பெருமை வேற! நாராயணா! யார் இவங்களுக்கு எல்லாம் இப்படி செய்ய சாங்ஷன் கொடுத்தாங்ன்னு தெரியலை.

30- 40 வருஷம் முன்னே ஹோமம் செய்கிற எஜமானனுக்கு ஹோம சமாசாரங்கள் தெரியும். அதனால ஏமாத்த முடியாது. இப்பல்லாம் செய்து வைக்கிறவங்க வெச்சதுதான் சட்டம். சரியா கேள்வி கேட்க ஆளில்லை. ஆனா விஷயம் தெரிஞ்ச வைதீகர் வித்தியாசமா செய்தா உடனே கேள்வி வருது. என்ன இப்படி செய்யலை? ஏன் அப்படி செஞ்சீங்க? பத்து விரல்லேயும் மோதிரம் போட்ட தீக்ஷிதர் இப்படித்தான் செஞ்சார்....

சரி சரி இப்படியே எழுதிட்டு போனா பொலம்பல் போஸ்ட் ஆகிடும்.

வைதீக முறை ஒழுங்கா வேத அத்யயனம் செய்தவங்க செய்யக்கூடிய முறை. ஏன்னா செய்முறையில நிறைய வேத மந்திரங்கள் வரும். எல்லா ஹோமத்துக்குமே ஸ்தாலீபாகம் என்கிற ஹோமமே பேசிக். மத்தது எல்லாமே அதோட வேறு வடிவங்கள்தான். ஆரம்பிக்கிற முடிக்கிற ப்ரொசீஜர் எல்லாத்துக்கும் ஏறக்குறைய ஒண்ணே. நடுவிலே தேவதை, ஹோமம் செய்கிற பொருள், மந்திரங்கள் மாறும். அவ்வளவே. அதனால ஹோமம் செய் முறை கத்துக்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்லை. செய்கிறதும் ரொம்ப ஒண்ணும் கஷ்டம் இல்லை. ஆனாலும் பாருங்க, பெரும்பாலும் இவை பலன் தரதில்லை. ஏன்?

மந்திரங்களுக்கு ஒரு தாள கதி இருக்கு. இவ்வளவு நேரம் சொல்லணும்ன்னு இருக்கு. இப்படி ஸ்வரம் இருக்கணும்ன்னு இருக்கு. சீக்கிரமா ஹோமம் முடிச்சுட்டு ஆபீஸ் ஓடணூம்ன்னு அவசரப்படுத்தினா ஆகாது. வாத்தியாருக்கு என்ன தக்ஷிணைதான் கிடைச்சுடுமே. அவரும் அவசர அவசரமா மந்திரம் சொல்லி, சிலதை விட்டு ஒப்பேத்திவிட்டு போய் விடுவார்.

ஹோமம் செய்விக்கிறவர் ஆசார அனுஷ்டானத்தோட இருக்கணும்ன்னு இருக்கு. சந்தியாவந்தனமே செய்யாதவர் ஹோமம் செய்வித்து என்ன பலன் அடைய முடியும்?

ஹோமம் செய்கிறவரும் ஆசார அனுஷ்டானத்தோட இருக்கணும். பெரு நகரங்களிலே பல சாலைகள் வழியாதான் பைக்கிலே போகிறாங்க. போகிற இடத்திலே குளித்து சுத்தி செய்து கொள்ளலாம். எத்தனை பேருக்கு சாத்தியம்? காலை முதல் நீர் கூட குடிக்காம இருந்து செய்யணும். எனக்கு வேதம் சொல்லி கொடுத்த குருவை தவிர இப்படி யாரும் செய்து இன்னும் பார்க்கலை. காலை காபி இல்லாவிட்டா ஒண்ணுமே ஓடறதில்லயே! நாமேதான் உபசாரம்ன்னு பால் சாப்பிடறீங்களா ன்னு கேட்கிறோமே!

இதான் மந்திர லோபம் தந்திர லோபம் என்கிறது. என்னதான் ஹோமத்தின் கடைசியில இதுக்கெல்லாம் ப்ராயச்சித்தம் செய்தாலும் முழு பலன் கிடைக்காதுதான்.

பக்தி லோபமும் உண்டு. ஏதோ யாரோ சொன்னாங்கன்னு செய்யலாம்ன்னு இறங்கி வாத்யார்கிட்டதான் தர்பையை கொடுத்தாச்சேன்னு ஹோமத்தை கவனிக்காம அந்த நேரத்தில வருகிற நண்பர்கள் கூட பேசிகிட்டு இருக்கறவங்களை பாத்து இருக்கேன். நம்பிக்கை இல்லாம எவ்வளோ பலன் கிடைக்கும்?

திருப்பி பொலம்பலா போயிட்டு இருக்கா?
சரிசரி..

இப்ப புதுசா பல பல ஹோமங்கள் வேற உருவாகிகிட்டு இருக்கு....

1 comment:

geethasmbsvm6 said...

நாமேதான் உபசாரம்ன்னு பால் சாப்பிடறீங்களா ன்னு கேட்கிறோமே!//

முடிச்சதும் தான் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார் எங்க புரோகிதர். வந்ததும் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார்.