Pages

Wednesday, May 24, 2017

ஆன்மீக விசாரம் - 12





மனசை வீணா அலைக்கழிக்க வேண்டாம். ஏதேனும் யோசிக்கணும்ன்னா அது வொர்தியா இருக்கணும். இதை இப்ப யோசிச்சு என்ன செய்யப்போறோம்? ஒண்ணுமில்லைன்னு பதில்ன்னா யோசிக்க வேணாம். இந்த ரூலை அப்ளை பண்ணப்பண்ண பலதும் ஒண்ணும் பிரயோஜனமில்லைன்னு அடிபட்டுப்போகும். ஆரம்பத்துல புத்தியை பயன்படுத்தி இதை செய்ய வேண்டி இருந்தாலும் காலப்போக்கில இது ஆடோமேடிக்கா நடக்கும். போகப்போக எண்ணங்கள் குறைவாயிடும்.
இந்த மாதிரி ப்ராக்டிஸைத்தான் ஞான யோகத்தில நித்யாநித்ய வஸ்து விவேகம்ன்னு சொல்வாங்க. நித்ய அநித்ய வஸ்து. பிரயோஜனமில்லாத விஷயத்தை யோசிக்கிறது வீண்; அதால ஒண்ணும் நடக்கப்போறதில்லை. அது அநித்ய வகை.
மனசு ஆனை மாதிரி; அதுக்கு எதாவது செஞ்சு கொண்டே இருக்கணும். பாகன் ஒரு சின்ன குச்சியை அது கிட்ட கொடுத்துடுவானாம். பெரிய பெரிய மரத்தை எல்லாம் கூட அனாசயமா தூக்கிண்டு போகிற இந்த ஆனை அந்த சின்ன குச்சியையை துதிக்கையில பிடிச்சுண்டு அது பாட்டுக்கு இருக்குமாம். அதே போல மனசுக்கும். வேலைதானே? நா கொடுக்கிறேன், இந்தான்னு வேலையை கொடுத்துட்டா அது பாட்டுக்கு அதை பார்த்துக்கொண்டு இருக்கும். அப்படி என்ன வேலை கொடுக்கறது? ஆரம்ப காலங்களில மந்திர ஜபம் நல்ல வேலை. அது உபதேசமான மந்திரமோ அல்லது யாரும் செய்யக்கூடிய நாம ஜபமோ, எப்படி வேணுமானாலும் இருக்கட்டும். ஆரம்பத்திலே மத்த எண்ணங்களே அதிகமா வந்து போகும். சளைக்காம அதெல்லாம் அப்புறம் ஆகட்டும்; இப்ப மந்திர ஜபம் மட்டுமேன்னு சொல்லிண்டு திருப்பித்திருப்பி தொடரணும். நாளடைவில அது பாட்டுக்கு ஒரு தனி ட்ராக்ல ஓடிண்டு இருக்கும்! வேற ஏதோ சிந்தனைகள் வந்து அடச்சீ ஜபத்துக்கு இல்லே உக்காந்தோம்ன்னு பாத்தா இந்த மந்திரம் பாட்டுக்கு ஒரு லெவல்ல ஓடிண்டு இருக்கும். இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிஞ்சு ஏதோ ஒரு ஸ்டேஜ்ல மந்திரம் அதோட ரிதம்ல அதோட ஸ்பீட்ல ஓடும். அப்புறம் நமக்கு வேலையில்லை. சும்மா உக்காந்துண்டு அதை கவனிக்கறது மட்டுமே வேலை! இந்த ருசி கிடைச்சுட்டா, ஆஹா!
பல வருஷங்களுக்கு முன்னே ஸ்வாமி தயாநந்தர் சொல்லிக்கொடுத்த டெக்னிக் மனசை அமைதிப்படுத்தும். அது பெரிய வேலை ஒண்ணுமில்லை; இருந்தாலும் தொடர்ந்து செய்ய பயிற்சி வேணும். வேடிக்கையா இருக்கே? என்ன அதுன்னா…
'அமைதியா' ஒரு இடத்தில உக்காந்து கொண்டு கண்களை மூடி பெரிய மூச்சு இழுத்துவிட்டு மனசை கவனிக்க ஆரம்பிக்கணும். என்ன யோசிச்சுக்கொண்டு இருக்கோம் இப்ப? இப்படி கவனிக்க ஆரம்பிச்சா அது அமைதியாயிடும்! அமேசிங்!
பின்னே எங்கேப்பா கேட்ச்? இதுக்கு என்ன பெரிய பயிற்சின்னா….
அது அங்கேயே நிக்காது. கவனம் சிதறி அடங்கி இருக்கிற மனசு எப்போ பிச்சுண்டுதுன்னு தெரியாம அது பாட்டுக்கு நடந்துடும்!
இந்த கவனம் வைக்கிறது என்கிறதுதான் நமக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு. சின்ன பசங்களை கான்சென்ட்ரேட் பண்ணுன்னு நாம பாட்டுக்கு சொல்லுவோம். ஆனா அதை செஞ்சு பாத்தாத்தான்…. ஹிஹிஹிஹி… கஷ்டமாத்தான் இருக்கு!
அதுக்கு ஒரு சின்ன பயிற்சி. என் அண்ணன் செய்யறதை பார்த்து இருக்கேன்.
ஒண்ணுலேந்து நூறு வரை எண்ணுங்க!
தூ! இதென்ன பிசாத்து வேலைன்னு சொல்றீங்களா? ஒரு சின்ன கண்டிஷன். ஆட்டோமேடிக்கா தடதடன்னு சொல்லிண்டு போகாம மெதுவா ஒவ்வொரு நம்பர் சொல்லறதையும் நினைவுல வெச்சுக்கற மாதிரி சொல்லிண்டு போகணும்! அஹா! முயற்சி பண்ணிப்பாருங்க!

No comments: