Pages

Friday, May 5, 2017

கிறுக்கல்கள் - 213





மாஸ்டரின் சீடர்களில் ஒருவர் பெரிய தவறு செய்துவிட்டார். மற்ற சீடர்கள் எல்லோரும் மாஸ்டர் எப்படி கடிந்துகொண்டு முன் உதாரணமான தண்டனை தருவார் என்று பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். ஒன்றுமே நடக்காமல் ஒரு மாதம் கடந்தது.

ஒருவருக்கு பொறுக்கவில்லை. நேரடியாக மாஸ்டரை அணுகி தவறு செய்தவரை கூப்பிட்டு விசாரித்து தண்டனை கொடுக்குமாறு கேட்டார். ‘இதுக்கெல்லாம் சும்மா பாராமல் இருக்க முடியாது. கடவுள் கண்களை கொடுத்து இருக்கிறார் அல்லவா?”

மாஸ்டர் சொன்னார்; “ஆமாம். கூடவே கண் இமைகளையும்!”


No comments: