Pages

Monday, May 1, 2017

ஶங்கர ஜயந்தி அனுபவம்!





சில சமயம் ’பகவானே இதுக்குக்கூடவா இப்படி அனுக்ரஹம் செய்வே’ ந்னு கேட்கிற
அளவுக்கு பகவான் செய்துடுவான்.

நேத்திக்கு ங்கர ஜயந்தி. எங்கூர்ல இருக்கிற ங்கர பக்த ஜன சபாவில ஒவ்வொரு வருஷமும் சாயங்காலம் வேத கோஷத்துடன் ஊர்வலம் உண்டு. இந்த வருஷமும் கலந்துக்கச்சொல்லி கோரிக்கை இருந்தது. ஞாயிறு ட்ரைவர் லீவு என்கறதால நண்பர் ஒத்தரை அழைத்துப்போகச்சொல்லி இருந்தேன். அவரும் சரியாக வந்துவிட்டார். சரியான நேரத்துக்கு போய்விட்டோம். ஆனால் அந்த கட்டிடம் பூட்டி இருந்தது. சரி என்று பாடசாலைக்கு போனோம். போகிற வழியில் நிர்வாகி வந்து கொண்டு இருந்தார். காரை நிறுத்திவிட்டு ஹாலுக்குப்போனோம். நிர்வாகி தவிர நாங்கள் இரண்டு பேர்தான் இருந்தோம். ‘ கிடக்கட்டும்ப்பா ஊர்வலம் ஆரம்பிக்கும் வரை பாராயணம் செய்வோம்’ என்று வேத பாராயணத்தை ஆரம்பித்தோம். இன்னும் இரண்டு பேர் சேர்ந்தார்கள். உபநிஷத் இரண்டு பகுதி முடியும் போது ஊர்வலத்துக்கு ரெடி என்றார்கள். ‘என்ன இவ்வளவு பேர்தான் இருக்கிறோம்?’ என்றார் நண்பர். வேதம் முழங்க எண்ணி 4 பேர், ஊர்வலத்துடன் போக/ பூஜை செய்ய 2 பேர், ஜீப் ட்ரைவர் உதவியாளர்- இவ்வளோதான். நண்பரிடன் பகவத் கீதை பாராயணத்தை கேட்க 2 பேர்தான் இருந்தார்கள் என்று குறை பட்டுக்கொண்ட வித்வானிடம் ‘பகவானுக்கு அர்ஜுனன் ஒத்தந்தான் இருந்தான் உனக்கு 2 பேர் இருந்தார்களா? பரவாயில்லையே!’ என்று சமாதானப்படுத்திய மஹா பெரியவர் கதை சொன்னேன்.
பின் ஊர்வலத்தில் செல்ல இடத்தை பார்த்தோம். படங்களை ‘ஏளப்பண்ணி இருந்த’ ஜீப்புக்கு முன்னாலா பின்னாலா என்று கேட்டதற்கு முன்னால் என்றார் நிர்வாகி. முன்னே போய் நின்றால் அங்கே கூம்பு ஒலிபெருக்கி வைத்து கட்டி இருந்தது. எதுக்கு என்றால் இதில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலி பரப்புவோம் என்றார். அப்போ நாங்க சொல்லறது எங்களுக்கே கேட்காதே! பின்னால் போகிறோம் என்று பின்னால் போனோம். அங்கே பார்த்தால் ஜெனெரேட்டர் வண்டி!
இவ்வளவுதான் வேத சப்தத்துக்கு மரியாதையா என்று நொந்து கொண்டேன். சரி, பகவான் இதைத்தான் கொடுத்து இருக்கிறான். 20 -30 அடி இடைவெளி விட்டு பின்னே போவோம் என்று சொல்லி போக ஆரம்பித்தோம். ஆங்காங்கே வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வந்து பூஜை செய்து ப்ரசாதம் வாங்கிக் கொண்டார்கள்.
நாங்கள் அது வரை சந்தித்து இராத அனுபவம் ஏற்பட்டது. பூஜை முடித்துக்கொண்டவர்கள் வேத பாராயண கோஷ்டியைதனியாக வலம் வந்து தெருவில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்! ஆண்டவா, நான் சொன்னதை ஒரு பெரிய முறையீடாக எடுத்துக்கொண்டாயா? என்று தோன்றியது. வழக்கமாக அதிக பட்சம் ஓரிரு இடங்களில் கைகூப்புவார்கள். அதுதான் இது வரை நடந்து இருக்கிறது. இப்போது? வழி நெடுக இதேதான்! வலம் வந்த அரை மணியில் ஏழெட்டு இடங்களில் இது நடந்தேறியது! இது எனக்கல்ல; வேதத்துக்கு கிடைத்த மரியாதை என்று திருப்பித்திருப்பி கவனத்துக்கு கொண்டு வந்து கொண்டேன்!

இறைவன் பெரும் கருணையாளன்!

related facebook posting by our friend Sri.Jayaraman

No comments: