Pages

Thursday, May 11, 2017

ஆன்மீக விசாரம் - 4





சரி. ஏதும் செஞ்சாத்தானே பிரச்சினை? நா ஒண்ணுமே செய்யாம இருக்கட்டுமான்னா…. அதுவும் தப்புதான். முழுக்க சரணாகதி செய்யாமல் இருக்கறப்ப செயலற்று இருக்கிறது தப்பு. செய்யாமையானும் கெடும்ன்னு வள்ளுவர் சொல்லி இருக்காரில்லே?
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானும் கெடும்(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:466)
நாம செய்ய வேண்டியது பலதும் இருக்கு. தர்மசாஸ்திரம் செய்யச்சொல்லி விதிச்சது சிலது. லௌகீக வாழ்க்கை வற்புறுத்துவது சிலது. இதை செய்யாம விட்டாலும் பிரச்சினை வரும்.
குடும்பக்கடமை இருக்கிற க்ருஹஸ்தன் சும்மா செயலத்து இருக்கேன்னு ஆரம்பிச்சா என்ன ஆகிறது? வேலை செய்து குடும்பத்தை காப்பாத்தற கடமைன்னு அவனுக்கு ஒன்று இருக்கில்லையா? அதை செய்யாமையானும் கெடும்.
பின்ன சும்மா இருக்கக் கூடாதா? சும்மா இருன்னு நிறைய பேர் சொன்னதா சொல்லறாங்களேன்னா...
யார் பகவானிடம் முழுக்க முழுக்க சரணடைஞ்சுட்டாங்களோ அவங்க சும்மா இருக்கலாம். என்ன நடக்கணுமோ அதை பகவானே பாத்துப்பார் என்கிற கான்பிடன்ஸ் இருக்கும்.
அப்ப அவர் என்ன தனியா உக்காந்து கொண்டு விட்டத்தை பாத்துக்கொண்டு ஒண்ணுமே செய்யாம கிடைப்பாரா?
இல்லை; அப்படி இல்லை.
 நான் செய்யறேன் என்கிற நினைப்பு இல்லாம அப்பப்ப என்ன தோணுகிறதோ அதை அவர் செஞ்சு கொண்டு இருப்பார். எதை எப்ப எப்படி செய்யணுமோ அதை அப்ப அப்படி செய்ய பகவான் தூண்டி விடுவான். இவரும் செய்து விடுவார். கர்மா புதுசா ஒட்டாது!

இது ரொம்ப முதிர்ந்த நிலை. இந்த அளவுக்குக்கூட போக வேணாம். இந்த பாதையில அடி எடுத்து வெச்சுட்டால் கொஞ்ச நாளில செய்ய வேண்டியது / போக வேண்டிய பாதை தானா முன்னே வந்து நிக்கும். அப்ப கேள்வி கேக்காம அந்த வழியில போக தெரிஞ்சுக்கணும். நான் இந்த வழியில போகணும்ன்னு நீ நினைக்கறயா? ரைட்டு! ன்னு போய்கொண்டே இருக்கணும். மாட்டவே மாட்டேன் எனக்கு இதுதான் வேணும், இப்படித்தான் போவேன்னு சில சமயம் அடம் பிடிப்போம்; அதுக்குத்தக்க ரிசல்ட் கிடைக்கும்! அப்ப சரணாகதி செயலில் இல்லை; அஹங்காரமே இருக்கு. அதான் பிரச்சினை. ரிசல்டை பாக்கிறப்ப அடடா தப்பு பண்ணிட்டோமேன்னு நொந்துப்போம். அப்பவாவது அடுத்த முறை அடம் பிடிக்காம இருக்கத் தோணுமா? தோணாது! ஏன்னா அதுதான் வாசனை என்கிறது, ரொம்ப பலமானது! 

No comments: