Pages

Friday, May 19, 2017

ஆன்மீக விசாரம் - 9





இந்த பிரச்சினைகள் எப்ப வரும்?
ஒருவன் பிறக்கும் போதே எந்த நேரத்தில் என்ன நடக்கும்ன்னு நிர்ணயம் ஆயிடும்ன்னு கடலங்குடி நடேசையர் சொல்லறார். அதாவது 20 வயசிலா 80 வயசிலா என்கிறது போல. படிப்புக்கு அனுகூலமான நேரம் பத்து வயசில வராம 50 வயசில வந்து என்ன பிரயோசனம்? பணம் சம்பாதிக்க யோகம் 20 -30 ல வராம 60 ல வந்து என்ன பிரயோஜனம்? அதைப்பத்தி கவலைப்படாம அந்த அந்த நேரம் வந்து போகும். நல்ல ஜோசியர்கள் இதை கணிக்கிறார்கள். அதனால் கொஞ்சம் வழி காட்ட முடிகிறது. கூடவே ப்ராயச்சித்தங்களால தீருமா இல்லையான்னு அவங்களால சொல்ல முடியும்ன்னு நினைக்கிறேன். ரீடிங் எல்லாம் சரியா இருந்தாலும் டிவைன் இன்டர்வென்ஷன்னு ஒண்ணு இருக்கவே இருக்கு; ப்ரெடிக்ட் பண்ணதுக்கு மாறா நடக்க முடியும் என்கிறார் நண்பர் ஸ்வாமி ஓங்கார். இதையும் நினைவு வெச்சுக்கலாம்.
போகிற போக்கில…. 'நடக்கறதுதான் நடக்கும்ன்னா, பின்ன எதுக்கு ஜோசியம்?’ ன்னா ...
மனசை திடப்படுத்திக்க பிரயோஜனமாகும். ஒண்ணு இது நடக்காது விடுன்னோ அல்லது சீக்கிரம் சரியாயிடும்ன்னோ மனசு ஆறுதல் அடையலாம். தட்டுத்தடுமாறி டிகிரி முடிச்சவனை மேலே படிக்க வைக்கிறதா இல்லை பிசினஸ் வெச்சுக்கொடுக்கறதா போன்ற சிலதுக்கு பிரயோஜனமாகும். பசு மாட்டை கட்டி இருக்கும் கயிறு அனுமதிக்கும் அளவுன்னு ஒரு தியரி பாத்தோமில்லையா? அது படி சில வரையறைக்குள்ள நம் வாழ்க்கையை கொஞ்சம் சீரமைச்சுக்கலாம்.
ப்ராயச்சித்தங்கள் பத்தி லிஸ்ட் கேட்டாங்க. இங்கே எதுக்கு அதுன்னு தோணித்து. எந்த டிவி சானலும் காலையில அது போல ஒரு ப்ரோக்ராம் போடுது. எந்த ஆன்மீக பத்திரிகையை எடுத்துக்கொண்டாலும் அது மாதிரி ஏதாவது எழுதறாங்க. மேலும் எல்லா பத்திரிகையும் ஒரு ஆன்மீக மலர் வெளியிடுது! அங்கே கிடைக்கும்.

No comments: