Pages

Thursday, December 5, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 42





39 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சத்சித்விலசேந்த்ர ஸரஸ்வதி
பிறப்பு இடம்: கன்னியகுப்ஜம்
பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீபதி
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: கமலேஶ்வரா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 33
சித்தி: 3973 நந்தன வைசாக சுக்ல சதுர்தசி (கிபி 0872-ஏப்-29) இரவில்
மற்றவை:
இந்த ஆச்சார்யரின் குருவான ஶ்ரீ அபிநவ ஶங்கரர் இமயமலையில் தத்தாத்ரேய குகையில் பிரவேசம் செய்த போது அவர் மீது கொண்டிருந்த அதீத பக்தியினால் இவரும் அவரை பின்பற்றினார். தன் உயிரையும் விட எண்ணினார். ஆனால் உலகிற்கு இவர் ஆற்ற வேண்டிய கடமை பெரிது என்பதால் ஶ்ரீ அபிநவ ஶங்கரர் அவரை திருப்பி அனுப்பினார்.
பிரபலமான ஆனந்த வர்தனா என்னும் ஆலங்கரிகர் (கவிதை மற்றும் இலக்கிய அறிஞர்) (பொது ஆண்டு 820-890), புகழ்பெற்ற த்வன்யலோகாவை இயற்றியவர்; இந்த ஆச்சார்யரின் சமகாலத்தியவர் ஆவார். அவரும் இந்த காலத்திய பல பெரிய அறிஞர்களும் இந்த ஆச்சார்யரை உயர் மதிப்பீட்டில் வைத்திருந்தனர். மேலும் அவரது தரிசனத்தையும் வழிகாட்டுதலையும் நாடினர். அத்தகைய அறிஞர்களால் சூழப்பட்ட ஆச்சார்யர் பத்மபுராவில் (சரியான இடம் தெரியவில்லை) அதிக நேரம் செலவிட்டார்.
இறுதியாக ஆச்சார்யர் காஞ்சிபுர ஶ்ரீமடத்திற்கு திரும்பினார்.

No comments: