Pages

Tuesday, September 16, 2008

ஏகோத்திஷ்ட சிராத்தமும்...


ஏகோத்திஷ்ட சிராத்தமும் சபிண்டீகரணமும் இரண்டு வகை. ஒன்று காரிகையில் சொன்னபடி. இரண்டு மாஸி சிராத்த கிரமத்தில். அவரவர் வீட்டு பழக்கப்படி.

இதை செய்யாவிட்டால் எல்லா சம்ஸ்காரங்களையும் மீண்டும் செய்ய சொல்லி இருக்கிறதால் இதை அவசியம் செய்ய வேண்டும்.

குளித்து மத்தியான அனுஷ்டானங்கள் முடித்து திருப்பி குளித்து;

சங்கல்பம் செய்து இரண்டு அக்னிகளை ஸ்தாபித்து; வடக்கில் ஹோமத்துக்கு அக்னி, அதற்கு வலதாக பிண்டப்பிரதானத்திற்கு மேடை, அதற்கும் வலதில் அந்தணருக்கு பதிலாக அக்னி. இதை மேற்கு நோக்கி அமர்ந்துள்ள தகப்பனாராக த்யானம் செய்வர். அதனால் அவருக்கு மேற்கேதான் ஆசனம், பாத்யம் (காலில் நீர் அளித்தல்) அர்க்யம் (கைகளில் நீர் வார்த்தல்) ஆசமனம் முதலான உபசாரங்கள், எள் நீர் அளித்தல் எல்லாம்.

மாஸி சிராத்த கிரமத்தில் இந்த உபசாரங்கள் இல்லை. முகமன் கூறி வரவேற்பது மட்டுமே.

மற்றப்படி ஒரு அந்தணரை வரித்து சிராத்தம் செய்வது போலவே - திருப்தி கேட்பது உட்பட.
எள்ளும் நீரும் இறைத்துவிட்டு நமஸ்காரம் இல்லாமல் "இது ஜனார்த்தனனுக்கு பிரியமானது" என சொல்லி உணவளிக்கும் இடத்தில்; எள்ளும் நெய்யும் கலந்த பாயஸ அன்னத்தால் தெற்கு நோக்கி 32 ஆஹுதிகள். பானீயம் - திருப்தி கேட்டு தக்ஷிணை தாம்பூலம் உட்பட மீதி உபசாரங்களையும் முடிப்பர்.

பிண்ட ப்ரதானம்: அக்னியில் உள்ள அந்தணரையும் அனுப்பிவிட்டு தெற்கில் தெற்கு நுனியாக தர்ப்பைகளை பரப்பி எள்ளும் நீரும் விட்டு ஹோமம் செய்து மிஞ்சிய அன்னத்தால் குதிரை குளம்பு அளவு அன்னம் எடுத்து பிண்டம் போட்டு மேலே மீண்டும் எள்ளும் நீரும் விட்டு முடிப்பர். ஏதேனும் அன்னம் மிஞ்சினால் அதை நீரில் போட்டுவிட வேண்டும்.

மொத்தம் 16 சிராத்தங்கள் வரும்.


முதல் மாதம் குறைவாக இருக்கும் போது ஒன்று (ஊன மாசிகம்) மூன்றாம், ஆறாம் மாதங்கள், வருட முடிவில் அதே போல ஒன்றொன்று, (மொத்தம் 3) ஒவ்வொரு மாதமும் இறந்தவர் திதியில் =12 ; இப்படி மொத்தம் 16. தேச காலம் அனுகூலமாக இல்லாவிட்டாலும் நோய் வரலாம், மரணம் வரலாம் என்ற சந்தேகங்கள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் சேர்த்து சபிண்டீகரணத்துக்கு முன் ஒன்றாக 11 நாளில் செய்கிறார்கள். அப்படி செய்யும் போது 16 பிண்டங்களையும் ஒன்றாக சேர்த்து செய்வர். இப்படி இல்லாமல் மாதா மாதம் மாசிகம் செய்து வருட முடிவில் சபிண்டீகரணம் செய்வதானால் பிண்ட தானத்தை தனித்தனியாக செய்வர்.

(குழப்பிக்கொள்ள வேண்டாம். எப்படியும் மாதா மாதம் மாசிக சிராத்தம் உண்டு. இப்போது சொல்வது பிண்ட ப்ரதானம் மட்டுமே)

1 comment:

மெளலி (மதுரையம்பதி) said...

ஏகோதிஷ்டம் பண்ணிட்டு, சில தானங்களும் பண்ணின நினைவு...அதுக்குப் பிறகு மீண்டும் குளியல் அப்பறம் சபிண்டீகரணம் இல்லையா?...

சபிண்டிகரணம் போஸ்ட் அடுத்ததுன்னு நினைக்கிறேன், சோ கேள்விகள் அதை படித்த பின்னர். :)