Pages

Tuesday, December 2, 2008

ஞானவழி -1



பொன், நிலம், பெண் இவைகள்ல ஆசை வைத்தவங்களோ, வைக்காதவங்களோ அவங்களோட உள்ளே இருக்கிறது ஒரே சச்சிதானந்த சொரூபமான ப்ரம்மமே. அது நம் மனத்தடைகளை அகற்றி ஞானம் ஒளிர உதவட்டும் என்று பிரார்த்தனை செய்து ஆரம்பிக்கிறோம்...

ஞான யோகம் ன்னாலே நமக்கு இதெல்லாம் சரிப்படாதுன்னு ஒரு மனத்தடை வர வாய்ப்பு இருக்கு. கொஞ்சம் கூர்ந்து கவனிச்சு யோசிக்கணும்னாலும் போதிய உழைப்பு இருந்தா யாருமே புரிஞ்சுக்கலாம்.

ஞானம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள்லே முதல்ல இந்த புத்தகத்தை படிச்சு பயன் பெறக்கூடியவங்க யார் ன்னு சொல்லிடுவாங்க. சரியான முன் தயாரிப்பு இல்லாத போய் யாரும் குழம்பிவிடக்கூடாதுன்னுதான் அப்படி சொல்கிறது.

ஞானத்துக்கு யார் சரியான அதிகாரி?

யாருக்கு வைராக்கியம் வந்தாச்சோ அவர் ஞானம் பெற சரியான நபர். வைராக்கியம்னா உறுதி இல்லை. பலர் தப்பா இப்படி நினைக்கிறாங்க. வைராக்கியம்னா பற்று இல்லாம இருக்கிறது. அட! இது நமக்கு பழக்கமானதுதானே என்கிறீங்களா ? ஆமாம் கர்ம யோகத்தில திருப்பி திருப்பி பாத்த அதே பற்றின்மை. அப்ப கர்ம யோகத்தில தேரினவங்க ஞானத்துக்கு அதிகாரிதானே? அட சரியா சொல்லிட்டீங்க! பண்ணுருட்டி வழியா சென்னை போற பாதை திண்டிவனத்தில பாண்டி சென்னை பாதையோட சேருகிறது போல, கர்ம வழியானது ஞான வழில போய் சேந்துடும்.

மனிதர்கள்ல பல தரப்பட்டவங்க இருக்காங்க இல்லையா? நினைவாற்றலும் புரிஞ்சுகிற திறனும் வேறுபடும். ஆனா இதால ஒத்தரை உயர்வாகவோ, ஒத்தரை தாழ்வாகவோ நினைக்கக்கூடாது.
ஆதி சங்கரருக்கு சிஷ்யர்கள்ல ஒத்தர். மத்தவங்களுக்கு இவர் குறிச்சு கொஞ்சம் இளப்பம். மத்தவங்க பாடம் எடுக்கச்ச சந்தேகம் எல்லாம் கேட்டு பதில் வந்த பின் ஆஹா ஆஹான்னு கொண்டாடுவாங்க. இவரோ சாதுவா வாயே திறக்காம உக்காந்து இருப்பார். இதனால இவருக்கு புத்தி அவ்வளவு இல்லைன்னு மத்தவங்களுக்கு நினைப்பு. சங்கரருக்கு இது தெரியாம இருக்குமா. நம்மகிட்ட ஆசார்யன்ன்னு வந்து சேந்த பசங்களுக்கு வித்யா கர்வம் வரக்கூடாதே, இதை சரி செய்யணும்னு நினைச்சார். ஒரு நாள் பாடம் எடுக்க தயாராயிட்டார். ஆனா இந்த சாது சிஷ்யரை காணலை. அவர் வந்த பிறகு பாடம் ஆரம்பிக்கலாம்ன்னு சங்கரர் சொன்னார். எல்லாரும் இவனுக்கு போய் தாமதிக்கணுமான்னு நினைச்சாங்க. எங்கேடா போன்னான்னு எல்லாரும் யோசிச்சுகிட்டு இருக்கிறப்ப சாது சிஷ்யர் பாட்டு பாடிகிட்டே வந்து சேர்ந்தார். பாட்டை கேட்டவங்க திகைச்சுப்போயிட்டாங்க. ஏன்னா அது ரொம்ப கடினமான நடையில - தோடகம் என்கிற அமைப்பில அமைஞ்சது. அப்ப புதுசா கவனம் செஞ்சு குதிச்சுண்டே பாடினார். அன்னிலிருந்து அவரை தோடகாச்சாரியார் ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இது எப்படி சாத்தியமாச்சு? குருவருள் இருந்தா எல்லாமே சாத்தியம்தான்.

சிலர் சொல்லிதர சொல்லித்தர பிடிச்சுப்பாங்க. சிலருக்கு பல தரம் விளக்கமா சொல்லித்தர பிடிச்சுப்பாங்க. சிலருக்கு ஒரு தரம் புரிஞ்சு போச்சுனா அப்படியே ஞாபகம் இருக்கும். சிலர் மறந்து போவாங்க. இதை எல்லாம் நம்ம முன்னோர்கள் க்ளாசிபை பண்ணி வெச்சு இருக்காங்க. நமக்கு அது இப்ப அத்தியாவசியம் இல்லைனாலும் சுவாரசியமானதால அத கொஞ்சம் பாக்கலாம்.


3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இப்போத்தான் இந்த இடுகையை படித்தேன்...உள்ளேனய்யா....

திவாண்ணா said...

நல்வரவு!

Kavinaya said...

நானும் படிச்சிட்டேன் :)