எல்லாம் சரி சமமோ தமமோ, இதை எப்படி அடக்குவதுன்னு சொல்லுங்கன்னா...
முதல்ல கொஞ்சமாவது வெற்றிகரமா செய்யக்கூடியது தமம்தான்.
அதாவது புலனடக்கம்தான்.
இதுக்குத்தான் விரதம், ஆசாரம், தீக்ஷை சாஸ்திரம்ன்னு நிறைய கட்டுப்பாடு. காமத்தை தணிக்கணுமா கல்யாணம் பண்ணிக்கோ, பெண்ணாட்டியோட மட்டும் அனுபவி. அதுவும் இன்ன இன்ன நாட்கள் விலகி இருக்கணும். மாம்சம் சாப்படணுமா. சரி, இந்த இந்த பிராணியோடது எல்லாம் கூடாது. இந்த இந்த நாட்கள் கூடாது. இப்படி நிறைய கட்டுப்பாடுகள். இவை நமக்கு புலன்கள் மனம் போன படி பின்னாலேயே போகாம ஓரளவாவது கட்டுப்பாடு வர உதவுது.
மேலும் இந்த ஆசைகளை எல்லாம் பகவான் பக்கம் திருப்பி விடணும். சக்கரை பொங்கல் சாப்பிடனுமா? மார்கழி மாசம் இப்ப. சீக்கிரம் எழுந்து பகவானுக்கு பூஜை பண்ணி சாப்பிடலாம்!
இப்படி செய்த பின்னே மனசும் ஓஹோ நம்மால் இதெல்லாம் இல்லாம கூட இருக்க முடியும் போல இருக்குன்னு ஆரம்பத்துல கொஞ்சம் ஒத்துழைச்சு அவற்றோட நினைப்பிலே*யே* அலையறதை ஓரளவு நிறுத்திவிடலாம். அதாவது தனியா இருக்கிற வரை மனசு இதில் எல்லாம் போக இருக்க முடியும். தனியா இல்லாம உலக நடப்புல இறங்கும் போது பிச்சுகிட்டு ஓடும். சினிமா பாட்டு எங்கெப்பா, புதுசா என்ன சினிமா, எங்க ஹோட்டல் ஆரம்பிச்சு இருக்கான்னு ஓடும். எல்லாம் வாசனைகளாலதான்! குதிரைகள் லகான் இல்லாம இஷ்டத்துக்கு ஓடறா மாதிரி.
இப்ப சமத்தை கொண்டு வரணும். அதாவது மன அடக்கம். மனசு என்கிற நிலையிலேந்து புத்திங்கிற நிலைக்கு கொண்டு போனால் இது முடியும். அதாவது சலனத்தை விட்டு ஸ்திரமா நல்லதா கெட்டதான்னு நிர்ணயம் செய்கிற நிலைக்கு போகணும். இப்படி போக மன உறுதி ரொம்பவே வேணும். எவ்வளவுக்கு எவ்வளவு வைராக்கியம் இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு இது சுலபம். முன்னாலேயே இது கெட்டது, ஆன்ம முன்னேற்றத்துக்கு உதவாதுன்னு யோசிச்சு நிச்சயப்படுத்தி கொண்டதை இப்ப நினைவு படுத்தி சலனப்படாம இருக்கலாம்.
இப்படி சமம் தமம் ரெண்டையும் மாத்தி மாத்தி பயிற்சி செஞ்சு - உண்மைல வெகு வேகமா இரண்டும் நடப்பதால சேத்தேன்னு கூட சொல்லலாம்- பயிற்சி செஞ்சு சாதித்தே விட்டோம் என்கிற நிலைக்கு வந்துவிடலாம். இந்த முடிவு சமத்தோட நிறைவாகவே இருக்கும். அதாவது மனசு பரி பூரணமா அடங்கி இருக்கும். இது ஆன்மீகத்துல ரொம்ப முன்னேறிய நேரத்துலதான் வரும்ன்னு சொன்னது ஞாபகம் இருக்கலாம். அது வரை பயிற்சி செய்துகிட்டே மத்த படிகளையும் பாக்க வேண்டியதுதான்.
அப்பா, என்னால முடிஞ்சது இவ்வளோதான். மேலே வைராக்கியம் நீதான் பிச்சையா கொடுக்கணும்ன்னு பகவானை வேண்டிக்கணும். அவனும் பாவம் இந்த குழந்தை இவ்வளோ முயற்சி செய்யுதேன்னு கொஞ்சம் தருவான்.
கர்ம யோகத்திலே பாத்த இது நினைவு இருக்கு இல்லியா?
1 comment:
" நான் கட்டற்றவன், சுதந்திரமானவன்னு " சொல்கிறது கொஞ்சம் பாஷனா இருக்கு இல்லையா? இது சரிதானான்னு கொஞ்சம் யோசிக்கணும். :) அப்படி சொல்கிறவங்க உண்மையா என்ன சொல்ல வராங்க?
Post a Comment