Pages

Wednesday, December 3, 2008

ராஜ யோகம்.



ஹடயோகம் அல்லது ராஜ யோகம் என்கிறது மூன்றாம் வழி என்று முன்னமேயே பாத்தோம். முன்னமேயே அதைப்பத்தி ஒரு ஐடியா கொடுத்தாச்சு. அதைப்பத்தி இப்ப விரிவா எழுதப்போறது இல்லை.

முதலாவது இது ஒரு குருகிட்ட இருந்து நேரடியா பழக வேண்டிய சமாசாரம். இப்படி சரியா அமையாம போனா என்ன ஆகும்ன்னு முன்னேயே பாத்தோம். இப்படி விபரீதமா போய் விடக்கூடாது.
இரண்டாவதா இதில எனக்கு குறிப்பிடத்தக்க பரிச்சயம் கிடையாது. தெரியாத விஷயத்தில புகுந்து புறப்பட நான் விரும்பலை. எளிதா ஏதேனும் கிடைக்குமோன்னு பதஞ்சலி யோக சூத்திரத்தை புரட்டிப்பாத்தா தலையை சுத்துது. கொஞ்சம் சாம்பிள் பாக்கிறீங்களா?

முதல் இரண்டு சூத்திரங்கள்

** சித்தத்தின் விருத்தியை (வளர்ச்சியை) அடக்குதல் யோகம்.
அப்படி செய்யும் போது சைதன்யமான (இயங்கு சக்தியாக உள்ள) புருஷனுக்கு தன் சொந்த வடிவில் இருப்பு ஏற்படுகிறது.**

கண்ணீர் மல்க சில பேர் எனக்கு நன்றி சொல்கிறது காதுல விழுது. :-))

ஊன்றி படிக்காம ஒண்ணும் புரிஞ்சுக்க முடியாது. அப்பக்கூட ஒரு அனுபவியோட உதவி தேவைப்படும். அதனால பேசாம இத விட்டுட்டு அடுத்ததுக்கு போயிடலாம். மேலும் இதில வரக்கூடிய சில விஷயங்கள் ஞான யோகத்தில கூட வரும். ஒரு வேளை ஞான யோகம் முடிச்ச பிறகு பதஞ்சலி யோகம் சுலபமா புரியுமோ என்னவோ.

பொன் நிலம் பெண் இவைகள்ல ஆசை வைத்தவங்களோ வைக்காதவங்களோ அவங்களோட உள்ளே இருக்கிறது ஒரே சச்சிதானந்த சொரூபமான ப்ரம்மமே. அது நம் மனத்தடைகளை அகற்றி ஞானம் ஒளிர உதவட்டும் என்று பிரார்த்தனை செய்து ஆரம்பிக்கிறோம்...


2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//கண்ணீர் மல்க சில பேர் எனக்கு நன்றி சொல்கிறது காதுல விழுது. :-))//

புரியுது :-)

//ஊன்றி படிக்காம ஒண்ணும் புரிஞ்சுக்க முடியாது. அப்பக்கூட ஒரு அனுபவியோட உதவி தேவைப்படும். அதனால பேசாம இத விட்டுட்டு அடுத்ததுக்கு போயிடலாம். //

என்னது இது, நான் பரிக்ஷைக்குப் படிச்சதை சொல்ற மாதிரி இருக்கு? :-)

//மேலும் இதில வரக்கூடிய சில விஷயங்கள் ஞான யோகத்தில கூட வரும். ஒரு வேளை ஞான யோகம் முடிச்ச பிறகு பதஞ்சலி யோகம் சுலபமா புரியுமோ என்னவோ. //

அது சரி... Lets give a try. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

பொன் நிலம் பெண் இவைகள்ல ஆசை வைத்தவங்களோ வைக்காதவங்களோ அவங்களோட உள்ளே இருக்கிறது ஒரே சச்சிதானந்த சொரூபமான ப்ரம்மமே. அது நம் மனத்தடைகளை அகற்றி ஞானம் ஒளிர உதவட்டும்.........................இந்த வாக்கியங்களை நானும் ஒரு முறை சொல்லி, உங்களது அடுத்த பதிவுகளை தொடருகிறேன்.