Pages

Thursday, June 4, 2009

மனம் அலையாதிருக்க உபாயம் கேட்டல்



வஞ்சகமில்(லாத) பரமார்த்த குருவே சொன்ன வழிகள் அறிந்தேன். இனியோர் வசனங்கேளீர். சஞ்சலமற்று அகண்ட பூரணமாய்ச் சித்தம் (மனம்) ததாகாரம் (பிரமம்) ஆவதன்றோ சமாதி யோகம். உஞ்சலை (ஊஞ்சலை) ஒத்து அலைவது தன் சுபாவமாகி ஒரு கணத்தில் பல உலகாய் உதிக்கும் இந்த நெஞ்சகம் வத்துவில் அசையா நிவாததீப நிலை அடைவது எப்படியோ நீர் சொல்வீரே. {மனம் அலையாதிருக்க உபாயம் கேட்டல்}

நல்ல கேள்விப்பா. மனசுக்கு சத்வம் ரஜஸ் தமஸ் ன்னு மூணு குணம் உண்டு இல்லையா? அதில ஒரு நேரத்தில ஒரு குணம்தான் மேலோங்கி இருக்கும்.
சத்துவம் மேலோங்கின போது ஈஸ்வர பக்தி, கருணை, சாந்தம், ஞானம் ன்னு சன் மார்க குணங்கள் உண்டாகும்.
அதுவே ரஜோ குணம் அதிகமாகும்போது உலக சம்பந்தமான விஷயங்கள், உடம்பு சம்பந்தமான விஷயங்கள், சாத்திர வாசனை இப்படி இதில எல்லாம் விருப்பம் வருகிற குணம் இதெல்லாம் உண்டாகும்.
தமோ குணம் மேலோங்கித்துனா அகங்காரம், டம்பம், சோம்பல், தூக்கம், காமம், குரோதம் எல்லாம் உண்டாகும்.

இந்த மூணிலே தமத்தை விடணும்ன்னு எல்லாருக்குமே தெரியும். ரஜோ குணத்தையும் ஞானம் தேடுகிறவங்க விடணும்.
இந்த ரஜோ குணத்திலே மூணு விதம்.

உலக வாசனை என்பது உலகத்திலே எல்லாரும் புகழும் படியா மெச்சும் படியா துதிக்கும்படியா நாம இருக்கணும்ன்னு ஆசை படுகிறது.
இப்படி எல்லாரும் பிரியப்படுகிற மாதிரி நடந்து கொள்கிறது இயலாத காரியம். எப்பவும் எல்லாரையும் திருப்தி செய்ய முடியாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொத்தரை திருப்தி செய்யலாம் அவ்வளவே. ஏன் மழை பெய்யறது. சிலர் பாழும் மழைன்னு திட்டறாங்க. சிலர் ஆஹா மழைன்னு சந்தோஷப்படறாங்க.
பதிவிரதையான சீதையையே குறை சொல்லித்து இந்த உலகம். அப்புறம் என்ன? அதுவும் 2 யுகங்களுக்கு முன்னே. இப்ப கலி யுகத்திலே கேக்கவே வேண்டாம்.
அதனால நமக்கு சரின்னு தோன்றியதை செய்து கொண்டே போகணும். மத்தவங்க மேம்போக்கா பாத்துட்டு புகழறதும் வேணாம்; இகழறதும் வேணாம். ஆனம் லாபம் எந்த வழியிலோ அதிலேயே போகப்பாக்கணும்.

இரண்டாவது தேக வாசனை. காயகல்பம் எல்லாம் சாப்பிட்டு தேகத்தை நெடுங்காலம் அழியாம அப்படியே வெச்சுக்கணும். சந்தனம், பூ எல்லாம் அணிஞ்சு அலங்காரம் செய்துக்கணும் என்கிற ஆசை. இந்த காலத்திலே வருஷா வருஷம் மெடிகல் செக்அப் ன்னு நிறைய பரிசோதனைகள் எல்லாம் செய்து பல பரிசோதனை கூடங்கள் பிழைக்க வழி செய்து தரோம். நிறைய வைட்டமின் மாத்திரை விற்பனை ஆகுது. ஒரு சின்ன ஜலதோஷம்ன்னா கூட ஒரு சுக்கு கஷாயம் வெச்சு குடிக்காம டாக்டரை தேடி ஓடறோம். மொத்தமா ஒரு 500 ரூபா செலவானாதான் அப்பாடான்னு இருக்கு. நம்மால சில ப்யூட்டி பார்லர்கள் பிழைக்குது. எல்லாம் சில மணி நேரம் மட்டுமே நிக்கிற அலங்காரத்துக்கு! தினம் மூணு தரம் ஆடை மாத்தாட்டா ஏதோ குறைஞ்சு போனதா நினைக்கிறோம்.
ஹும்!
என்னதான் பணக்காரன் ஆனாலும், படிச்சவங்களா இருந்தாலும் ஒரு நாள் யமதர்ம ராஜன் கூப்பிட்டா கிளம்பித்தான் ஆகணும். இதோ இந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டுட்டு வரேன்ன்னு சொல்ல முடியாது. டிரெஸ் மாத்திட்டு வரேன்னு சொல்ல முடியாது.
ஞானத்தை அப்பியாசிக்கிறவங்க உடல் மேலே இருக்கிற இந்த அபிமானத்தையும் விலக்கவே வேணும்.

மூணாவது சாத்திர அபிமானம். அதாவது எல்லாரைவிட நமக்கு அதிகமா தெரியணும். நம்மை விட அதிகமா தெரிசஞ்ச ஆசாமி இருக்கவே கூடாதுன்னு ஒரு விசித்திர எண்ணம். "இதை தெரியுமா? அதை தெரியுமா? சொல்லுங்க பாப்போம்!” ன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. மத்தவங்க எதை சொன்னாலும் "அப்படியா? என்ன ஆதாரம்?"ன்னு கேட்டு மட்டம் தட்டப் பாப்பாங்க.



7 comments:

yrskbalu said...

diva gi,

can you give some references from other upanised to make mind STILL.

1. i got wonder without help or studied from acharyas you able to convey and write so clarity. that means you are already studied in your previous births. am i correct ?

2. after this can we study bramasuthra - by adisankara. you can write important sloga. we discuss in comments.

கிருஷ்ண மூர்த்தி S said...

yrsk பாலு அல்லது யோகிபாலா அவர்களே,

உங்களுக்குத் தமிழ் தான் தெரிகிறதே, ஆங்கிலத்தில் இப்படித் தடுமாறாமல், தமிழிலேயே எழுத முயற்சிக்கலாமே! higopi.com, google indic மாதிரி ஏகப்பட்ட எளிய வழிகள் தமிழில் எழுத உதவியாக இருக்கே!

இரண்டாவதாகக் கேள்வி கேட்பதற்கு முன்னால், என்ன புரிந்து கொண்டோம் அல்லது எதைப் புரிந்து கொள்ளத் தடுமாறினோம் என்பதை ஒருதரம் நினைத்துப் பார்த்து விட்டுக் கேள்விகள் கேட்டால், உங்களுக்கும் பயனாக இருக்கும். உங்களை மாதிரியே கேள்விகளோடு இருக்கும் எங்களைப் போல சிலருக்கும் கூட, ஒரு விதத்தில் அது உதவக் கூடும்.

இதற்குமுந்தைய பதிவுகளிலும், நிறையக் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஆனா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளவும் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். எதற்கு என்பது, எனக்குப் புரியவில்லை, உங்களுக்காவது புரிந்து தான் கேள்வி எழுப்பி இருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

வடையைத் திங்கச் சொன்னா, துளையை எண்ணுகிற விதமா உங்க கேள்வி இருக்கிற மாதிரிப் பட்டதாலேயே, இதை எழுத வேண்டி வந்தது.

திவாண்ணா said...

Blogger yrskbalu said...

//can you give some references from other upanised to make mind STILL.//

ம்ம்ம் பார்க்கலாம். கொஞ்சம் தேடத்தான் வேணும். ஆனால் இன்றைய பதிவு இதைத்தான் சொல்லுகிறது.
ரொம்ப சுலபமா...
மனசை பாருங்க. அது என்ன செய்யுதுன்னு. அப்படியே அடங்கிடும். எவ்வளவு நேரம் அதை பார்க்கிறோமோ அவ்வளவு நேரம் அது அடங்கி இருக்கும். ஆனால் ரொம்ப நேரம் அதை பார்க்க முடியாது என்கிறதே பிரச்சினை. நம் கவனம் கொஞ்சம் விலகினாலும் எண்ணங்கள் வந்து ஆக்கிரமிச்சுடும்!

1. i got wonder without help or studied from acharyas you able to convey and write so clarity. that means you are already studied in your previous births. am i correct ?
ம்ம்ம்ம். இருக்கலாம். நாம் எல்லோருமே ஆன்மீக பயணத்தை மட்டுமே விட்ட இடத்தில் இருந்து துவங்கறோம்- அடுத்த பிறவியிலே.
உதவி இல்லைன்னு இல்லை. முறையா யார்கிட்டேயும் பாடம் கேட்கலைதான். பெரும்பாலும் படித்து தெரிந்து கொண்டது. சந்தேகங்களுக்கு பலர் உதவியை நாடி இருக்கிறேன்.
2. after this can we study bramasuthra - by adisankara. you can write important sloga. we discuss in comments.

இப்ப சொல்லத்தெரியலை. ஞான காண்டம் முடிந்ததும் பதிவுகளை முடித்து விடுவதாகதான் உத்தேசம்.
என்ன நடக்குமோ யார் கண்டது?
:-))
கடைசியா- கிருஷ்ணமூர்த்தி சார் சொல்லி இருக்கிறதை சரியா எடுத்துப்பீங்கன்னு நம்பறேன். கொஞ்சம் யோசிச்சாலும் அதை பப்ளிஷ் பண்ணி இருக்கேன்னா இந்த நம்பிகையில்தான். மேலோட்டமா பாக்கிரப்ப கொஞ்சம் ஹார்ஷ் ஆ தோணினாலும் he means well.

yrskbalu said...

dear krishnamoorthy and diva,

1. in one of the chapter diva wrote like that. i became grandmother. but i feel writer to be male. i dont want continue with doubt.

2. in ghana path every body not in same level. i asking questions in my level and this to be understood by DIVA. i think he understand correctly and replying well.
i kept open to everybody for watch , ask themself, any doubt ask correct person for understanding. this is called study course.

finally this is my responsibility also to explain it.
but currently i want to discuss with diva.
3. i am weak in typing. i purposely
making short. sorry . i will correct in future

திவாண்ணா said...

dear krishnamoorthy and diva//

that would be thiva.

//1. in one of the chapter diva wrote like that. i became grandmother. but i feel writer to be male. i dont want continue with doubt.//

:-))
that was a joke.
it is a very old joke that a expectant father shouts that he has become a mother on hearing his wife delivered a female child. this is a parody of that.

//2. in ghana path every body not in same level. i asking questions in my level and this to be understood by DIVA. i think he understand correctly and replying well.//
oh it is not that i understand your levvel well. i need to know more for that. i usually keep things simple. that is all.

// i kept open to everybody for watch , ask themself, any doubt ask correct person for understanding. this is called study course.//

in a blog it helps if questions are kept to the point of the post itself. otherwise there will be digression. if one wants to ask specific questions not relating to the post there is always the mail link on the right panel.

//finally this is my responsibility also to explain it.
but currently i want to discuss with diva.//

no problem.

//3. i am weak in typing. i purposely
making short. sorry . i will correct in future//

it is ok. feel free to write in english or tamil.
the links km pointed out use a phonetic keyboard and so you need not feel diffident to try that. type ammaa and you will get அம்மா. you can also try an add on to firefox (if you are using that) like tamilkey.

Kavinaya said...

//மனசை பாருங்க. அது என்ன செய்யுதுன்னு. அப்படியே அடங்கிடும். எவ்வளவு நேரம் அதை பார்க்கிறோமோ அவ்வளவு நேரம் அது அடங்கி இருக்கும்.//

என் அனுபவத்தில், நான் பார்த்தாலும் அது ஓடிக்கிட்டேதான் இருக்கு. நானும் பின்னாடியே ஓடறதுதான் மிச்சம். ஒரு வேளை எனக்குதான் பார்க்கத் தெரியலை போல :(((

திவாண்ணா said...

என் அனுபவத்தில், நான் பார்த்தாலும் அது ஓடிக்கிட்டேதான் இருக்கு. நானும் பின்னாடியே ஓடறதுதான் மிச்சம். ஒரு வேளை எனக்குதான் பார்க்கத் தெரியலை போல :(((//

கொஞ்சம் பயிற்சி வேணும். சிரத்தையோட ஈடுபட்டா சுலபமா வந்துடும் கவலை வேணாம்! முதல்லே க்ஷண நேரம்தான் இருக்கும். அப்புறம் தொடர்ந்த பயிர்ச்சியாலே அதிக நேரம் நிக்கும்.