Pages

Wednesday, December 16, 2009

விசார சங்கிரகம்-4



9.ஹ்ருதயம் ப்ரஹ்மத்தை யன்றி வேறில்லை என்பது எப்படி?

ஆன்மா ஜாக்ர, சொப்ன, சுழுப்திகளில் நேத்திரம், கண்டம், ஹ்ருதயமென்னும் ஸ்தான முன்னிலையாகப் போகங்களை புஜிக்கினும் அது தன்னுடைய முக்கிய ஸ்தானமாகிய ஹ்ருதயத்தை விட்டு எப்போதும் நீங்குகிறதில்லை. ஸர்வாத்மகமான ஹ்ருதய கமல மத்தியில் அதாவது மனாகாசத்தில் நானென்றும் அவ்வாத்ம ஜோதி பிரகாசிக்கிறது. இப்படி ஒவ்வொரு தேகத்திலும் விளங்குவதால் இதையே சாக்ஷி என்றும் துரியமென்றும் சொல்லுவார்கள். இந்த நானென்னும் ஜோதியின் அந்தர்கதமாய் ஸர்வதேகங்களிலும் நானனற்று விளங்கும் பரப்ரஹ்மமாகிற ஆத்மாகாசமே (ஞானாகாசமே) எதார்த்த வஸ்து. இதுவே துரியாதீதம். ஆகையால் ஹ்ருதய மென்பது ப்ரஹ்மத்தை யன்றியில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் ப்ரஹ்மம் எல்லா ஜீவர்களினுடைய ஹ்ருதயங்களிலும் ஆன்ம சொரூபமாக பிரகாசிக்கிற காரணத்தாலேயே பிரஹ்மத்திற்கு ஹ்ருதயம் என்றோர் பெயருண்டு.
__
விதம் படு முளத்தொறும் விசேடவறி வாயுற் றிதம்படுத லாலிதய மென்றிறை தன்னை.... - பிரம கீதை
விதம் படும் உளத்தொறும் விசேட அறிவாய் உற்று இதம் படுதலால் இதயம் என்று இறை தன்னை.... - பிரம கீதை
__
ஹ்ருதயம் என்பதன் பொருள் ஹ்ருத் + அயம் என்ற பிரிவால் ப்ரஹ்மமேயாகிறது. ஆன்ம சொரூப மாகப் பிரகாசிக்கும் பிரஹ்ம வஸ்துவானது எல்லா ஜீவர்களினுடைய ஹ்ருதய ஸ்தானத்தில் நிவஸிக்கின்ற தென்பதற்கு சர்வ ஜனங்களும் நான் நான் என்று மார்பை தொட்டுக் காட்டுவதே போதுமான சாட்சி.
===
நினைவு, கனவு, ஆழ் உறக்கம் என்கிற நிலைகளிலே கண், கழுத்து, இதயம் ந்னு ஆன்மாவுடைய இடத்தைச் சொன்னாலும் அது எப்பவும் ஹ்ருதயத்துல இருந்து கொண்டு வெளியுடன் தொடர்புலதான் இருக்கும். எல்லா ஆன்மாவும் இருக்கிற ஹ்ருதய கமலம், மனாகாசம் ந்னு பலவிதமா சொல்கிற இந்த இடத்தில ஆன்ம ஜ்யோதி பிரகாசிக்கிறது. இப்படி ஒவ்வொரு உடம்பிலும் இது இருக்கிறது. அதை சாக்ஷி ந்னும் துரியம்ன்னும் சொல்லுவாங்க.

இப்படி ஒவ்வொரு உடம்பிலும் உள்ளே இருக்கிறது ஆன்மாகாசம், ஞானாகாசம் என்கிற ஒரே பரபிரம்ம வஸ்துதான். இதனாலேயே பிரம்மத்துக்கு ஹ்ருதயம் ந்னும் பெயர்.
ஆர்டிக் முதல் அண்டார்டிக் வரை இருக்கிற எல்லா ஜனங்களும் நான் ந்னு சொல்கிறபோது கை தானியங்கியா மார்கிட்டேதான் போகும்; தன் ஹ்ருதயத்தைத்தான் சுட்டிக்காட்டறாங்க. யாரும் வயித்தையோ, கண்ணையோ காலையோ காட்டறாங்களா?


3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா..:)

yrskbalu said...

this heart is not our usual heart.

our mahans told it will illumine when

you are merged with oneness. rishis,mahans with their experienced and conveyed this truth.

திவாண்ணா said...

@மௌலி
நன்னி . :-))

@பாலு yes, you are right.:-)