Pages

Monday, December 21, 2009

விசார சங்க்ரஹம் 5



10.சர்வ பிரபஞ்சமும் மனதின் சொரூபமே யெனின் பிரபஞ்சம் பொய்யென்றல்லவோ ஏற்படுகிறது? அப்படியானால் பிரபஞ்சத்திற்கு வேதத்தில் ஸ்ருஷ்டி கூறப்பட்டிருப்பதேன்?
ப்ரபஞ்சம் சுத்தப்பொய்யே யென்பதிற் சம்சயமில்லை. பொய்யான வுலகத்தைப் பொய்யாக்கி மெய்யான ப்ரஹ்மத்தை அறிவிப்பதிலேயே வேதத்தின் முக்கிய கருத்து. இது பற்றியே வேதங்கள் உலகிற்கு ஸ்ருஷ்டியை அங்கீகரித்தனவேயன்றி வேறில்லை. மேலும் மந்தாதிகாரிகளுக்கு க்ரம ஸ்ருஷ்டியால் ப்ரஹ்மத்தில் ப்ரக்ருதி, மகத்தத்வம், தன் மாத்திரை, பூதம், உலகம், தேகமாகிய இவை கிரமமாக வுண்டாகின வென்றும்; தீவிர அதிகாரிகளுக்கு யுகபத் ஸ்ருஷ்டியால் ஆன்மாவாகிய தன்னை யறியாத தோஷத்தினாலுண்டான தனது நினைவுகளாலேயே சொப்னம் போன்று இவ்வுல குண்டாயிற்றென்றும் கூறும். இங்ஙனம் உலக ஸ்ருஷ்டியைப் பலவிதங்களாகக் கூறுவதிலிருந்தே எப்படியேனும் ப்ரபஞ்சத்தைப் பொய்யென்று சாதித்து ப்ரஹ்மத்தை அறிவிப்பதிலேயே வேதத்தின் தாத்பர்யமென்பது பெறப்படும். ஜகம் மித்தையென்பதை சொரூபானந்த வநுபவரூப அநுபூதி நிலையில் எல்லாரும் பிரத்யக்ஷமாகவே அறியலாம்.

பிரம்மத்தைத்தவிர வேற ஒண்ணுமில்லை. அப்ப இந்த பிரபஞ்சம் பொய்தானே? அப்படிப்பட்ட பிரபஞ்சத்தை ஏன் வேதத்திலே எப்படி பிறந்ததுன்னு விவரிச்சு இருக்கு?
வேதத்தின் முக்கிய நோக்கம் பொய்யான உலகத்தை பொய்ன்னு சொல்லி உண்மையான பிரம்மத்தை காட்டுவதே! ஆனா நடைமுறையை கருதி ஆன்மீகத்தில அதிகமா முன்னேறாதவங்களுக்கு ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து அக்னி ந்னு வரிசையா சொல்லி இருக்கு. விஷயம் புரிஞ்சுக்ககூடிய தீவிர அதிகாரிகளுக்கு நினைவுகளாலேயே ஒரேயடியா பிரபஞ்சம் உண்டாச்சுன்னு சொல்லி இருக்கும். எப்படி இருந்தாலும் ஆன்ம அனுபூதி நிலையிலே எல்லாருமே ஜகத் பொய்ன்னு புரிஞ்சுக்கலாம்.



No comments: