Pages

Friday, October 22, 2010

ஒருவன் முக்தி அடைந்துவிட்டால் ...



कृतार्थ प्रति नष्टमप्यनष्टं तदन्यसाधारणत्वात् ।।22।।
க்ரு«தார்த²ம் ப்ரதி நஷ்டமப்ய நஷ்டம்° தத³ந்ய ஸாதா⁴ரணத்வாத் || 22||

த்ருஷ்யமானது, க்ருதார்த்தம் =முக்தி அடைந்த ஒருவனைக்குறித்து; நஷ்டமபி = நாசமானாலும்; தத³ந்ய = அவனைவிட வேறான; ஸாதா⁴ரணத்வாத் = சாமான்யர்களுக்கு; அநஷ்டம்° = நாசமாகாமல் ஆகும்.

த்ரஷ்டா இருப்பதால்தான் த்ருஷ்யம் இருக்கிறது என்றால் ஒருவன் முக்தி அடைந்துவிட்டால் அவன் பார்த்த பொருட்கள் எல்லாம் அழிந்துவிடும் என்றில்லை. ப்ரக்ருதி ஒன்றுதான் என்றாலும் சீவர்கள் அனேகர். எவன் அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவித்துவிட்டானோ, எவன் முக்தியை அடைந்து விட்டானோ அவனுக்கு ப்ரக்ருதியால் ஆக வேண்டியது ஏதுமில்லை. அதனால் அவனைப்பொறுத்த வரை மட்டுமே அவை நாசமாகின்றன. மற்றவர்களுக்கு அவை இருக்கவே இருக்கும். அவர்களுக்கு ப்ரக்ருதி செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்கும். முக்தனை பொறுத்த வரை அதனால் பிரயோசனம் ஒன்றுமில்லை.

No comments: