Pages

Tuesday, October 26, 2010

ஸம்யோகம்



स्वस्वामिशक्त्योः स्वरूपोपलब्धिहेतुः संयोगः ।।23।।

ஸ்வஸ்வாமி ஶக்த்யோ​: ஸ்வரூபோபலப்³தி⁴ ஹேது​: ஸம்°யோக³​: || 23||

ஸ்வ (சக்தி) = த்ருஷ்யமாக இருக்கும் தன்மை; ஸ்வாமி ஶக்த்யோ​: = த்ரஷ்டாவாக இருக்கும் தன்மை (இவற்றுக்குரிய யோக்யதை உடைய); ஸ்வரூப = பற்பல வடிவமான புத்தியின் த்ருஷ்ய சொரூபம் , ஸ்வாமியின் த்ரஷ்டா சொரூபம்; உபலப்³தி⁴ = போகம், முக்தி (அபவர்க்கம்) இரண்டின் தோற்றத்துக்கு; ஹேது​: = காரணமாக இருப்பது; ஸம்°யோக³​: = ஸம்யோகம் ஆகும்.

இதுவே பலவாறாக ஸ்வ-ஸ்வாமி பாவம், த்ருஷ்யமாயும், த்ரஷ்டாவாயும் இருத்தல்; போக்யமாயும்- போக்தாவாகவும் இருத்தல் எனப்படுகிறது.

ப்ரக்ருதிக்கோ அதனால் ஏற்பட்ட புத்திக்கோ சுயமாக யோக்யதை ஏதுமில்லை. அவை ஜடமாகும். புருஷன் தன் அருகில் உள்ள புத்தியால் காண்பிக்கப்படும் விஷயங்களை பிரகாசப்படுத்துகிறான். (வெளிச்சம் போட்டுக்காட்டுகிறான்) அதனால் அவற்றுக்கு ஒரு யோக்யதை உண்டாகிறது. அவை நுகர் பொருட்கள் (போகம்) ஆகின்றன. இவற்றால் - இந்த போகங்களால், புருஷன் நுகர்வோன் (போக்தா) ஆகிறான். எப்படி எனில் நுகர்தல் (போகம்) ஏற்பட்டதே புருஷனின் சக்தியால்தான். இப்படி பரஸ்பரம் ஒரு யோக்யதை உண்டாக்கப்படுகிறது. இப்படி எது உண்டாக்குகிறதோ, அந்த காரணமே ஸம்யோகம் ஆகும்.

No comments: