Pages

Friday, October 1, 2010

துவேஷம்:



दुःखानुशयी द्वेषः ।।8।।

து³:கா²நுஶயீ த்³வேஷ: || 8|| 

மோஹத்தின் காரணமாக அனுபவிக்கப்படும் துக்கம் அல்லது அதன் சாதனம் – இவற்றால் உண்டாகும் சித்த விருத்தியானது த்வேஷமாகும்.

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம். அது கிடைக்காமல் போகிறது. இன்னொருவருக்கு கிடைத்து விடுகிறது. அதனால் தடையாக இருந்ததின் மீதும் அதை அடைந்த மற்றவர் மீதும் த்வேஷம் உண்டாகலாம். ராகமே த்வேஷதிற்கு வித்து.
அனுபவித்த துக்கத்தின் நினைவும் தோன்றலாம்; துக்க சாதனம் பார்க்கக்கூடியதாக இருக்கலாம், அல்லது அத்ருஷ்டமாகவும் இருக்கலாம். நம்மை ஹிம்சித்தது மிருகமோ, விரோதியோ, நோயோ, விபத்தோ, மற்ற வேதனைகளோ இருக்கலாம். இந்த நினைவுகளே நம்மை மீண்டும் அவற்றை அனுபவிக்க வைக்கின்றன. த்வேஷத்தை உருவாக்குகின்றன.
இப்படி உண்டாகும் த்வேஷத்தை விலக்குவது எப்படி? தன்னைப்போல மற்ற மனிதர்களையும் பிராணிகளையும் துக்கப்பட விடக்கூடாது என்ற கருணையே த்வேஷத்தை நீக்கி சித்தத்தை தெளிய வைக்கும்.

No comments: