Pages

Wednesday, October 6, 2010

கர்மாசயம்:



क्लेशमूलः कर्माशयो दृष्टादृष्टजन्मवेदनीयः ।।12।।
கர்மாசயம்:
க்லேஶமூல​: கர்மாஶயோ த்³ரு«ஷ்டாத்³ரு«ஷ்டஜந்மவேத³நீய​: || 12||

க்லேஶ மூல​: கர்மாஶயோ த்³ரு«ஷ்ட அத்³ரு«ஷ்ட ஜந்ம வேத³நீய​:
(அவித்யையை) க்லேசங்களை காரணமாக உடைய (சித்தத்தில் உள்ள) கர்ம வாசனைகள் பார்க்கக்கூடிய இந்த ஜன்மத்திலும், பார்க்க முடியாத அடுத்த ஜன்மங்களிலும் அனுபவிக்கத்தக்கவை ஆகின்றன.
அவித்தை, அஸ்மிதை, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகியவற்றிலிருந்து கர்ம வாசனைகள் உண்டாகின்றன. இந்த வாசனைகள் அடுத்த பிறப்பை உறுதி செய்கின்றன. ஆயுள், போகம், இவற்றையும் தருகின்றன. அவித்தை, அஸ்மிதை ஆகிய க்லேசங்களையும் தருகின்றன.
இவற்றை விலக்குவது எப்படி?
தீவிரமாக செய்யப்பட்ட மந்திர ஜபம், தபஸ், ஸமாதி இவற்றாலோ; ஈஶ்வரன், தேவதை, மகரிஷி, மற்ற மகான்கள் இவர்களின் ஆராதனத்தாலோ புண்ய கர்ம வாசனை உண்டாகின்றது. இது அதே ஜன்மத்தில் பலன் தர ஆரம்பிக்கும். இதே போல் தீவிர வேகத்தில் பயந்தவன், வியாதியஸ்தன், ஏழை, நம்பியிருப்பவன், மஹான்கள், தபஸ்விகள் ஆகியோருக்கு செய்யப்படும் அபசாரத்தால் உண்டாகும் பாப கர்ம வாசனைகளும் அதே ஜன்மத்தில் பலனை தரும். இது போலத்தான் நந்திகேஸ்வரர் செய்த புண்ணியத்தால் மனித சரீரம் விடுத்து தேவ சரீரம் அதே ஜன்மத்தில் பெற்றார். நகுஷன் அத்ரி மகரிஷிக்கு செய்த அபசாரத்தால் அதே ஜன்மத்தில் மலைப்பாம்பானான்.
க்லேசமற்ற யோகிக்கு அடுத்த ஜன்மத்தில் பலன் தர கர்ம வாசனை இராது. அதே போல் நரகத்தின் வேதனையை அனுபவிக்கும் பிராணிக்கு புண்யம் பாபம் தரும் கர்ம வாசனை இராது.

No comments: