Pages

Wednesday, October 27, 2010

ஸம்யோகத்துக்கு காரணம்:




  तस्य हेतुरविद्या ।।24।।

தஸ்ய ஹேதுரவித்³யா || 24||

தஸ்ய =அதன் (முன் சொன்ன த்ருச்ய-த்ரஷ்டா ஸம்யோகத்தின்) ஹேது = காரணம்; அவித்³யா = அஞ்ஞானம்.
அந்த காரணம் என்னவென்றால் அஞ்ஞானம்.
புருஷனுக்கும் ப்ரக்ருதிக்கும் நான் என்ற வேறுபாடு தோன்றும் போது அது பிரமை (பிரமம்)[பிரம்மம் இல்லை!] ஆகிறது. இந்த பிரமை உள்ள சித்தம் ப்ரலய காலத்தில் ப்ரக்ருதியில் ஒடுங்கும் (லயமாகும்). சிருஷ்டி காலத்தில் வெளிப்பட்டு புருஷனின் நுகர்பொருள் (போக்யம்) ஆகிறது. இப்படி ஸம்யோகம் ஆகும்போது அவிவேகிக்கு பந்தம் ஏற்படுகிறது. அவித்தை விலகி, அதனால் ஏற்பட்ட ஸம்யோகமும் விலகின விவேகிக்கு பந்தம் ஏற்பட காரணம் இல்லை. அதனால் முக்தி அடைகிறான். அவிவேகிக்கு பந்தம் உள்ளதால், அவித்யையின் வாசனை இருப்பதால் ப்ரக்ருதியில் லயமானாலும் முக்தி ஏற்படாது. விவேகக்யாதி, தர்மமேக ஸமாதி ரூபத்தை அடையும் போதுதான் சித்தம் வறுபட்ட விதை மீண்டும் முளைக்காதது போல வாசனைகள் நீங்கி வளர்ச்சி அடைதலை நீங்கும். அப்போது புருஷன் மட்டுமே இருப்பதால் அந்நிலை மோக்ஷம் ஆகும்.

No comments: