முன் பதிவு போலவே இன்னொன்று:
விமானம் கும்மிருட்டில் புயலில் மாட்டிக்கொண்டது.
"கடவுளே காப்பாத்து!" என்று அலறினான்.
"வெளியே குதித்துவிடு!" என்று குரல் கேட்டது.
குதித்தான்.
"கடவுளே காப்பாத்து!" என்று அலறினான்.
"பாராசூட்டை திற!" என்று குரல் கேட்டது.
திறக்க கயிறை பிடித்து இழுத்தான்.
பாராசூட் திறக்கவில்லை.
"கடவுளே காப்பாத்து!" என்று அலறினான்.
பாராசூட் எதிலோ மாட்டிக்கொண்டு நின்றது. இருட்டில் தரை தெரியவில்லை. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. குளிர் வாட்டியது.
"கடவுளே காப்பாத்து!" என்று அலறினான்.
"பாராசூட்டை அறுத்து விடு!" என்று குரல் கேட்டது.
அவன் அறுக்கவில்லை. இரவு முழுதும் அப்படியே ஊசலாடிக்கொண்டு இருந்தான்.
காலையில் மக்கள் அவனது உயிரற்ற, விறைத்த உடலை கண்டு பிடித்தனர்- பூமிக்கு மூன்று அடி உயரத்தில்.
1 comment:
இது நிறையப் படிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
Post a Comment