Pages

Thursday, April 6, 2017

கிறுக்கல்கள் - 193




வியாபாரி ஒருவரின் வாழ்க்கை துன்பங்கள் மிகுந்ததாயிற்று. அதனால் வியாபாரத்திலும் பணம் பண்ணுவதிலும் மட்டுமே கவனத்தை செலுத்தினார்.
அவரை சந்தித்த போது மாஸ்டர் சொன்னார்: ”ஒரு காலத்தில் தன் கால் தடங்களை பார்த்து பயந்த ஒருவன் இருந்தான். அதனால் நடப்பதை விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான். ஓட்டம் கால்தடங்களை இன்னும் ஆழமாக ஆக்கிற்று. அதற்கு பதில் நின்றிருக்கலாம் இல்லை?”

No comments: