Pages

Tuesday, April 18, 2017

கிறுக்கல்கள் - 200




மடாலயத்தில் இருந்த அயல்நாட்டு ரோஜா செடியில் பூக்கும் அருமையான மலர்களை காண கவர்னர் விஜயம் செய்தார். அவர் வந்த போது செடியில் ஒரே ஒரு மலர் மட்டுமே இருந்தது!

விசாரித்ததில் மாஸ்டர் அந்த ஒரு மலரைத்தவிர மற்றவற்றை கொய்து விடச் சொல்லி இருந்தது தெரிய வந்தது. ஏன் என்று வினவினார்.

மாஸ்டர் சொன்னார்; “ அப்போதுதான் அந்த ஒரு மலரையாவது பார்ப்பீர்கள் என்று! அவை எல்லாமே இருந்திருந்தால் ஒன்றையும் பார்த்து இருக்க மாட்டீர்கள்!”

ஒரு சிறு இடை வெளிக்குப்பின் கேட்டார் “நண்பரே! உங்களுக்கு பன்மை என்பது மிகவும் பழகிவிட்டது. உண்மையில் தனி மனிதன் ஒருவனை எப்போது பார்த்தீர்கள், சொல்லுங்கள்!” 

No comments: