Pages

Thursday, April 13, 2017

கிறுக்கல்கள் - 197




இறையியலாலர்கள் தம் நம்பிக்கை அமைப்பின் மீது வைக்கும் விஶ்வாசத்தால் சத்தியத்தைக்கூட காண தயாராக இல்லை!” என்பார் மாஸ்டர்.
இறை தூதரே நேரில் வந்தால் கூட நிராகரித்து விடுவார்கள்!
தத்வஞானிகள் கொஞ்சம் பரவாயில்லை. நம்பிக்கைகள் மீது அதிகம் சார்ந்து இல்லாததால் தேடலில் இன்னும் கொஞ்சம் திறந்த மனதோடு இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. தத்துவத்துக்கு வார்த்தைகளும் கருதுகோள்களும் வேண்டி இருக்கிறது. நினைப்புகளோ கருத்துக்களோ இல்லாத மனதுக்கே சத்தியம் அகப்படுகிறது! அதனால் தத்துவத்தால் இது இல்லை என்று மட்டுமே சொல்ல முடிகிறது.

தத்துவம் ஞானம் என்னும் மருந்தால் நீக்கப்படும் வியாதி! அதன் பின் குட்டிக்கதைகளும் மௌனமுமே அங்கிருக்கும்!”

No comments: