Pages

Wednesday, December 30, 2009

விசார சங்க்ரஹம் 9



இன்று ரமண ஜயந்தி!
14. சந்நியாசத்தின் யதார்த்தமான தாத்பர்யம் என்ன?
சந்நியாசம் என்பது நானென்னும் சங்கற்ப தியாகமேயன்றி வெளி விஷயங்களை விடுவதல்ல. இந்த சந்நியாசமுள்ளவனுக்கு ஏகாந்தத்தி லிருந்தாலும் அபார சம்சாரத்திலிருந்தாலும் சமமாகவே தோன்றும். வேறு விஷயத்தில் மனதைச் செலுத்தியிருக்கும் போது பக்கத்திலுள்ளது தெரியாதது போல ஞானி எவ்வளவு வியவகாரங்களை செய்யினும் நானென்ற போதம் வராமல் தன்னிடத்திலேயே மனதிருப்பதால் அவன் ஒன்றும் செய்யாதவனேயாம். தான் அசையாமற் படுத்திருந்தும் கனவில் தலை கீழாக விழுவதாய்க் காண்பது போல அஞ்ஞானி அதாவது நானென்பதறாதவன் ஏகாந்தனாய் சதா நிஷ்டையிலிருந்தாலும் சர்வ வ்யவகாரங்களையும் செய்தவனேயாம் என்று பெரியோர்கள் கூறியிருக்கின்றனர்.

சந்நியாசத்தோட எதார்த்தமான தாத்பர்யம் என்ன?
சந்நியாசம் என்பது நான் என்னும் நினைப்பை ஒழிக்கிறது அன்றி வெளி விஷயங்களை விடுவது இல்லை. இந்த சந்நியாசம் உள்ளவனுக்கு ஏகாந்தத்தில - தனியா இருந்தாலும் அபாரமான சம்சாரத்தில இருந்தாலும் சமமாகவே தோணும். வேற விஷயத்தில மனசை செலுத்தி இருக்கறப்ப பக்கத்தில உள்ளது தெரியாதது போல ஞானி எவ்வளவு வியவகாரங்களை செஞ்சாலும் நான் என்கிற நினைப்பு வராம தன்னிடத்திலேயே மனதிருப்பதால் அவன் ஒன்றும் செய்யாதவனேயாம். தான் அசையாம படுத்து இருந்தும் கனவில தலை கீழாக விழுவதாய்க் காண்பது போல அஞ்ஞானி அதாவது நானென்பது போகாதவன் ஏகாந்தனாய் எப்பவும் நிஷ்டையிலிருந்தாலும் எல்லா வ்யவகாரங்களையும் செய்தவனேயாம் என்று பெரியோர்கள் சொல்லியிருக்காங்க.

3 comments:

yrskbalu said...

gi.,

i wish you happy new year.

may god gives more courage and everything for you - for writing more articles ,other mahans articles
also.

you are the one of role model for others for sharing the knowledge to others .

i praying my guru yogiramsuratkumar
to support you for this god work.

may my guru bless you .

திவாண்ணா said...

நன்றி பாலு சார்!
கொஞ்ச நாளாக நேரமே இல்லை. பாராட்டி வந்த மடல்களுக்கு பின்னூட்டங்கள் போட முடியவில்லை. அனைவரும் மன்னிக்க. நன்றீ.

Geetha Sambasivam said...

இது கொஞ்சம் பரவாயில்லை, புரியறாப்போல் இருக்கு.

புத்தாண்டு வாழ்த்துகள்.