Pages

Saturday, July 14, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை 6

  
16. तापत्रयविनिर्मुक्तो देहत्रयविलक्षणः ।
 अवस्थात्रयसाक्ष्यस्मि चाहमेवाहम् अव्ययः ॥

 tāpatrayavinirmukto dehatrayavilakṣaṇaḥ |
 avasthātrayasākṣyasmi cāhamevāham avyayaḥ ||

 தா¹ப¹த்¹ரயவிநிர்முக்¹தோ¹ தே³ஹத்¹ரயவிலக்ஷண: |
 அவஸ்தா²த்¹ரயஸாக்ஷ்யஸ்மி சா¹ஹமேவாஹம் அவ்யய: || 

மூன்று வகை தாபங்களும் என்னை அணுக மாட்டா; மூன்று வகை உடல்களைக்காட்டிலும் நான் வேறானவன்; மூன்று நிலைகளுக்கும் நான் சாட்சியாவேன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன். 

17. दृग्दृश्यौ द्वौ पदार्थौ स्तः परस्परविलक्षणौ । 
दृग् ब्रह्म दृश्यं मायेति सर्ववेदान्तडिण्डिमः ॥ 

dṛgdṛśyau dvau padārthau staḥ parasparavilakṣaṇau |
 dṛg brahma dṛśyaṁ māyeti sarvavedāntaḍiṇḍimaḥ || 

த்³ருʼக்³த்³ருʼஶ்யௌ த்³வௌ ப¹தா³ர்தௌ² ஸ்த¹: ப¹ரஸ்ப¹ரவிலக்ஷணௌ |
 த்³ருʼக்³ ப்³ரஹ்ம த்³ருʼஶ்யம்ʼ மாயேதி¹ ஸர்வவேதா³ந்த¹டி³ண்டி³ம: ||

 காண்பவனும் காணப்பட்டதும் வேறானவை; காண்பவன் ப்ரஹ்மம், காணப்பட்டது மாயை. வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.

 18. अहं साक्षीति यो विद्याद् विविच्यैवं पुनः पुनः ।
 स एव मुक्तः सो विद्वान् इति वेदान्तडिण्डिमः ॥

 ahaṁ sākṣīti yo vidyād vivicyaivaṁ punaḥ punaḥ |
 sa eva muktaḥ so vidvān iti vedāntaḍiṇḍimaḥ ||

 அஹம்ʼ ஸாக்ஷீதி¹ யோ வித்³யாத்³ விவிச்¹யைவம்ʼ பு¹ந: பு¹ந: |
 ஸ ஏவ முக்¹த¹: ஸோ வித்³வாந் இதி¹ வேதா³ந்த¹டி³ண்டி³ம: ||

 மீண்டும் மீண்டும் விசாரித்து நான் சாட்சி மட்டுமே என்று எவன் புரிந்து கொள்கிறானோ, அவனே விடுதலையடைந்தவன்; அவனே ஞானி. வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.

5 comments:

Geetha Sambasivam said...

மூன்று வகை உடல்கள் என்றால் வாதம், பித்தம், கபம் உள்ள உடல்களைச் சுட்டுமா?

அப்போ தாபங்கள் என்னென்ன?? ம்ம்ம்ம்ம்ம்ம்???? காமம், குரோதம், மதம் போன்றவையா? தப்பாய்ப் புரிஞ்சுக்கறேனோ?

Geetha Sambasivam said...

மூன்று வகை நிலைகள், பிரமசரியம், கிரஹஸ்தாசிரமம், வானப்ரஸ்தம்???

திவாண்ணா said...

மூன்று வகை உடல்கள்: ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்கள்.
தாபங்கள்: ஆத்யாத்மிக, ஆதி பௌதிக, ஆதி தைவிக. > தன்னிடமிருந்தே எழுவன, வெளியிலிருந்து வருவன, தெய்வ சங்கல்பத்தால் வருவன.
மூன்று நிலைகள்: ஜாக்ரத், ஸ்வப்ன, சுசுப்தி.

Geetha Sambasivam said...

நான் இன்னமும் கீழ்நிலையிலேயே இருப்பதைக் காட்டுகிறது. :)))))) ஆனால் உடலுக்குஒருவேளை இப்படி இருக்குமோனு இதை யோசிச்சேனாக்கும். மத்தது நினைச்சுப் பார்க்கலை. அதிலும் தாபங்கள், சான்ஸே இல்லை. :))))

திவாண்ணா said...

தப்பில்லை.
நீங்க பக்தி மார்கத்தை விட்டு அடுத்த நிலைக்கு வர மாட்டேங்கிறீங்க!