Pages

Friday, August 10, 2012

கோளாறான எண்னங்கள் - 3


  
பல வருஷங்களுக்கு முன்னே என் பெரியம்மா இறந்து போனார். காரியம் நடக்குமிடத்தில் நான் இருந்தேன். அப்போதுதான் சில விஷயங்களை கற்றுக்கொண்டு இருந்தேன், கவனிக்க ஆரம்பித்து இருந்தேன். விஷயம் தெரிவது சில சமயங்களில் சங்கடம்

 ஒருவர் இறந்து போனால் பல ப்ராயச்சித்தங்கள் செய்ய நேரிடலாம். இறந்த நாள், திதி, நக்‌ஷத்திரம் பொருத்து சில சமயம், சில ப்ராயச்சித்தங்கள். இதற்கு காரியம் செய்து வைத்த வாத்தியார் அங்கே - ஞானவாபி என்கிறார்களே அது போன்ற இடத்தில் - இருந்த ப்ராம்ஹணர் இரண்டு பேரை கூப்பிட்டார். இன்ன விஷயமாக ப்ராயச்சித்தமாக என்னால் காவேரிக்குப்போய் துலா ஸ்நானம் செய்ய முடியதாகையால் எனக்காக நீ செய் என்று சொல்லி பத்து ரூபாயை கொடுத்தார். அந்த பத்து ரூபாயில் பஸ் ஸ்டாண்டுக்கு கூட போக முடியாது. செய்பவரும் கொடுத்தார். அவருக்கு ஏன் என்ன என்று தெரியவில்லை; சொன்னபடி செய்தார். வாங்கிக்கொண்டவரும் வாங்கிக்கொண்டார்; அவருக்கும் ஏன் என்ன என்று தெரியவில்லை! வாங்கிக்கொண்டவரின் கால்களை கவனிக்க நேர்ந்தது.

இந்த மாதிரி வாங்கிக்கொள்கிறார்களே அவர்கள் கால்களை அடுத்த முறை கவனியுங்கள். ப்ராயச்சித்தம் செய்யாமல் எவ்வளவு வாங்கி இருக்கிறார் என்று புரிந்து போகும்! எக்ஸீமா என்று ஒன்றை அது வரை பார்க்காமல் இருந்தால் அதை பார்த்துவிடலாம்! இது லேசில் ஆறவும் ஆறாது, உயிரை எடுக்கவும் எடுக்காது, சரியாகவும் ஆகாது!

பல பாபங்களை போக்க கடைசியில் பல மக்கள் எங்களிடம்தான் மருத்துவர்களிடந்தான் - வருகிறார்கள். பல வருஷங்கள் முன் ஒரு விஷயம் கவனிக்க ஆரம்பித்தோம். யாருக்கு எளிதில் தீராத வியாதி வருகிறது? யார் எங்கே வேலை செய்கிறார் என்று பார்த்தால் நிறைய வாங்கும் துறைஇல் இருப்பார்! இது பற்றி பேசிக்கொண்டு இருந்த போது திருச்சியில் ஒரு குழந்தைகள் வைத்தியர் இதே போல ஆராய்ச்சி செய்ததாகவும் இதே போல் ரிசல்ட் என்றும் தெரிய வந்தது. அப்புறம்தான் வாங்காத துறையே இல்லை என்றாகிப்போனது!
இப்ப பிரச்சினை இதை எல்லாம் வாங்கிகிட்ட நாங்க இந்த பாபங்களை எங்கே கொண்டு தொலைக்கிறது? :-)

2 comments: