Pages

Saturday, August 18, 2012

கோளாறான எண்ணங்கள் - 7

 
போன பதிவில் ப்ராது கொடுத்துட்டு விட்டுடலாம்ன்னு சொன்னேன்.
பலருக்கும் இது கஷ்டமாக இருக்கும். அதெப்படி விட்டுடறது? சொள்ளையா இவ்வளவு பணமாச்சே! என்றால்..

அந்த பணம் நம்ம கர்ம வினையால போக வேண்டியதான்னு நமக்குத்தெரியாது. அப்படி போக வேண்டியதா இருந்தா என்ன செய்தாலும் அது திரும்பி வராது. ஒரு வேளை அது திரும்பி வர வேண்டியதா இருந்தால் அதுக்கு நம்முடைய பாபங்கள் சிலதே கூட தடையா இருக்கலாம். இந்த பாபங்கள் நீங்க தடையும் நீங்கும்; நமக்கு கிடைக்க வேண்டியதும் கிடைச்சுடும். கார்த்தவீர்யார்ஜுனா, காணாமல் போன இது கிடைக்கட்டும்; நான் உனக்கு இன்னது செய்யறேன் என்பது சும்மா ஒரு வியாபாரம் இல்லை. தேவதையை திருப்தி செய்து சின்ன பாபத்தை போக்கிக்கிற சமாசாரம்.


பின்னே மனிதனை விட தேவர்களுக்கும் இறைவனுக்கும் அதிக ஆற்றல் இருக்கா இல்லையா? நம்மால முடியாதது அவர்களாலே முடியும். அவங்க முன்னேயே ஏன் செய்யக்கூடாது, இப்ப ஏன் செய்யணும்?

நாமா நம்மாலே முடியும்ன்னு நினைச்சு செய்கிறப்ப நம் அஹங்காரம் தலை தூக்குகிறது. பகவானும் சரி செய்யட்டுமே ன்னு தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பான். படற கஷ்டம் எல்லாம் வேடிக்கை பார்த்தபின் சரி பாவம் போகட்டும்ன்னு நிறைவேத்தி கொடுத்தாலும் கொடுப்பான். அப்படியே விட்டாலும் விட்டுடுவான். ஆனால் நாம் வேண்டிக்கொண்டால் அவனால செய்யாம இருக்க முடியாது - பலமான கர்மவினை தடையா இருந்தாலே ஒழிய. அதென்ன அவனால முடியாததும் உண்டான்னு சிலர் சண்டைக்கு வரலாம். முடியும் சாமி, முடியும். ஆனா அப்படி அவன் ஏன் செய்யணும். கர்மவினை என்கிறதும் அவன் போட்ட ரூல்தானே? அதை அவனே மீறினால் யார் அப்புறம் அதை மதிப்பார்கள்? அதனால சின்ன கர்மவினை தடையா இருந்தா போனாப்போறதுன்னு கொஞ்சம் கருணை காட்டி வேலை நடக்கலியேன்னு நாம் படுகிற தவிப்பையே தண்டனையா கருதி செய்து கொடுத்துடுவான்.

இப்படி எல்லாம் இல்லாமல் மேலே ஒரு படி போய் "பகவானே நீ என்ன தரயோ அதை வைத்துக்கொண்டு நான் வாழ்வேன்; நல்லதோ கெட்டதோ இரண்டுமே உன் ப்ரசாதம்" ன்னு வாழ கத்துக்கிட்டவங்க பாக்கியசாலிகள்! அவர்களுக்கு என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்!
இதுக்கும் மேலே... அப்படி இன்னும் மேலே போக முடியுமா என்ன? ஆமாம், முடியும்!
இதுக்கும் மேலே ஒரு படி போய் நம் செயல்கள் எல்லாமே அவன் செயலாகும் போது எல்லாமே நடக்க வேண்டிய படி நடக்கும். அதெப்படி?
நான், என் என்கிற அஹங்காரம் போய்விட்டால். எப்போது நம் கையில் ஒன்றும் இல்லை, எல்லாம் அவனே பார்த்துக்கொள்ளட்டும்ன்னு ஒரு சரணாகதி செய்ய முடிகிறதோ, அப்போது நம் செயல்கள் என்று ஒன்றும் இராது. எல்லாவற்றையுமே அவன் நடத்திக்கொண்டு போகும்போது நம் கர்ம வினைகள் எல்லாம் தொலையும். அந்த பக்குவத்தில் துன்ப இன்பங்கள் இரண்டையுமே சமமா கருதுகிற புத்தி இருக்கும். அதனால் "ஐயோ இப்படி நடக்கிறதே!" என்று நினைக்கிற சமாசாரமே கிடையாது.
அப்படி வாழ்கிற மஹான்களை நமஸ்கரித்து இந்த பதிவுகளை சமர்ப்பணம் செய்து நிறைவு செய்கிறேன்.
நல்லதே நடக்கட்டும்! நாராயணா!

No comments: