Pages

Tuesday, November 13, 2012

சுக சாதனம் - 5


அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்! மின் தடை விரைவில் நீங்கி எல்லார் வாழ்விலும் ஒளி ஏற்றட்டும்!


அப்படியானால் எப்படித்தான் அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுவது?

ஆரோக்கியமாக இருக்க அதற்கு முன் ரோகியாக இருக்க வேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை!

நோய் ஒன்றுமில்லாத போது ஒருவன் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லப்படுகிறான். அவன் முன்னால் நோய்வாய்ப்பட்டு இருக்க வேண்டும் என்று ஒன்றுமில்லையே?

இல்லை!

ஆகவே ஆரோக்கியமான மனிதன் யார் என்றால் நோய்வாப்பட்டு இருந்து இப்போது சுகமாக இருக்கும் ஒருவன் என்று சொல்ல வேண்டியதில்லை. அவன் சுகமாக இருப்பதாக சொல்லலாம். ஆனால் அவனைத்தான் சுகமாக இருப்பதாக சொல்ல முடியும் என்றில்லை. நோய் இல்லாமல் இருப்பதே ஆரோக்கியம்; முன்னால் நோய் இருந்து இப்போது இல்லாமல் இருப்பதல்ல.

சரிதான். ஆனால் எனக்கு இதன் சம்பந்தம் புரியவில்லை.

அதே போல சுகமாக இருப்பது என்றால் துக்கம் இல்லாமல் இருப்பது. முன்னால் துக்கமாக இருந்து இப்போது இல்லை என்றால்தான் சுகம் என்று இல்லை. ஏதேனும் ஆசையாலோ, வெறுப்பாலோ ஒருவருடைய மன சமநிலை தவறினால் ஆசையை பூர்த்தி செய்தோ அல்லது வெறுத்ததை நீக்கியோ அந்த சம நிலையை திரும்பப்பெறுவதே சுகம். ஆனால் சுகமாயிருக்க இப்படி ஒரு சஞ்சலமான மன நிலை தேவை என்று சொல்வது முட்டாள்தனமாகும்.

ஆமாம்.

முன்னால் நோய் இருந்து மீண்டால்தான் ஆரோக்கியம் என்றில்லாமல் இருப்பது போல முன்னால் துக்கம் இருந்து மீண்டால்தான் சுகம் என்றும் இல்லை. உண்மையில் நோயிலிருந்து மீண்டு கிடைக்கும் ஆரோக்கியத்தைவிட, நோய் வராமல் இருக்கும் ஆரோக்கியம் இன்னும் இயற்கையானது; நிலையானது; உண்மையானது. ஒரு மன சஞ்சலம் வராமலே இருக்கும் சந்தோஷம் இன்னும் இயற்கையானது, உண்மையானது, நீடித்து இருப்பது.

அப்படித்தானே இருக்கும்? ஆனால் அத்தகைய சந்தோஷத்தை எப்படி பெறுவது? சாதாரணமாக நமக்கு கிடைப்பது சுகத்தை தேடியும் துன்பத்தை விலக்கியும் கிடைப்பதுதானே?

உண்மைதான். ஆனால் மூன்றாவதாக ஒரு வழி சுகத்தை தேடிப்போகும் தொல்லை இல்லாமலும் அல்லது துன்பத்தை விலக்கும் தொல்லையும் இல்லாமல் இருக்குமானால், அது இன்னும் பூரணமானது, நிலையானது என்று நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையா?

அப்படித்தான். ஆனால் அந்த மூன்றாம் வழி என்ன?

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
மங்களம் நிறைய,
மகிழ்வொடு வாழ்த்துவம்!

திவாண்ணா said...

நன்றி அம்மா!