Pages

Wednesday, November 14, 2012

சுக சாதனம் - 6

 
தலைவர்: ஆனால் அந்த மூன்றாம் வழி என்ன?

ஸ்வாமிகள்: அது வேறொன்றும் இல்லை, மன சஞ்சலத்துக்கு இடம் கொடாமல் இருப்பதே!

அதை எப்படி செய்வது?

நோயை உண்டு பண்ணும் விஷயம் எதற்கும் மனிதன் இடம் தராமல் இருக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பான் அல்லவா?

ஆமாம்.

அதே போல தன் மன சமநிலையை பாதித்து துன்பம் தரும் எதற்கும் அவன் இடம் தராமல் இருந்தால் சுகமாக இருக்கலாம். வரு முன் காப்போன் என்கிற சொலவடைதான் இங்கே பயன்படுகிறது. உங்களை சுத்தமாக இருப்பதாக சொல்லிக்கொள்ள கைகளை சேற்றில் தோய்த்துவிட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது புரிகிறது. உண்மையான சுகம் என்பது பொருட்களை விரும்புவது வெறுப்பது ஆகியவற்றில் இருந்து வருவதல்ல. அவற்றுக்கு சம்பந்தமே இல்லாமல் மன சம நிலையில் இருப்பதே.

அப்படியேதான்.

ஆனால் அப்படிப்பட்ட சம மன நிலையை விருப்பு வெறுப்புகள் உண்டாக்கும் விஷயங்கள் ஏராளமாக இருக்கும் இந்த உலகத்தில் எப்படி பெற்று நிலை நிறுத்துவது?

எப்படியும் விருப்பு வெறுப்புகள் நிரம்பிய கிடங்கில் உள்ளவற்றை தீர்த்துவிட்டு சுகத்தை அடைவது என்பதைவிட, இது நடக்கக்கூடிய சாத்தியம் அதிகம்தான்.

அது அசட்டுத்தனமாக தோன்றினாலும் நீங்கள் சொல்வது நடைமுறை சாத்தியம் இல்லாதது போல இருக்கிறதே?

ஏன் அப்படி? ஒரு வேளை உங்களிடம் இருபது பொருட்கள் இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். அவற்றில் ஒன்றை பார்த்தாலும் உங்களுக்கு எரிச்சல் வருகிறது. எது சுலபம்? அவற்றை ஒவ்வொன்றையும் துணி போட்டு மூடுவதா, இல்லை உங்கள் கண்களை மூடிக்கொள்வதா?

சந்தேகமில்லை. கண்களை மூடிக்கொள்வதுதான்.

அதே போலத்தான் உலகத்தில் உள்ள கணக்கற்ற, உங்களை பாதிக்கும் விஷயங்களை கட்டுப்படுத்தவோ, மாற்றவோ அழிக்கவோ, உருவாக்கவோ உங்களால் முடியாது. ஆனால் நீங்கள் உங்கள் மனதை மெதுவாக கட்டுப்படுத்தி இவற்றால் சஞ்சலமடையாமல் இருக்க பயிற்சி கொடுத்துவிட முடியும். அது நம்மால் முடியக்கூடியதுதான். உங்கள் முன்னோர்கள் சுகமாக இருந்ததற்கு காரணம் அவர்களுக்கு இன்னும் அதிக சந்தோஷத்தைத்தரும் வசதிகள் இருந்ததோ அல்லது துக்கத்தை தருவன குறைவாக இருந்ததோ இல்லை. அவர்களால் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள முடிந்தது. அது ஓய்வு, அமைதி, போதுமென்ற மனத்தையும் அதனால் சுகத்தையும் கொடுத்தது. வெளி விஷயங்கள் சந்தோஷத்தை தர அவர்கள் அவற்றை சார்ந்திருக்கவும் இல்லை; அவை துக்கத்தை தர அனுமதிக்கவும் இல்லை. அவர்களது அமைதியும் சாந்தமும் திருப்தியும் இயல்பானது, இயற்கையானது, ஆரோக்கியமானது. ஆகவே அது இன்னும் அதிக நாள் நிலை நிற்பதாக இருந்தது. நீங்கள் சுகமாக இருக்க விரும்பினால் அத்தகைய மன நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக அந்தணர்களுக்கு அத்தகைய மன நிலை உடன் பிறந்தது; உள் நிறைந்தது. அதை உதாசீனம் செய்துவிட்டு வெளி உலகில் அவன் சுகத்தை தேடுவானேயானால் அவன் அதை அடுத்த பிறவியிலும் பெறுவது துர்லபமே! ஏனெனில் கொடுத்த ஒரு வெகுமதியின் பெருமை உணர்ந்து சரியாக பயன்படுத்தாவிட்டால் அடுத்த பிறவியில் அந்த வெகுமதியை கடவுள் கொடுக்க மாட்டார். உங்கள் பிறப்புரிமையான திருப்தி என்ற ஸ்வபாவத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் ஸ்வதர்மங்களை - கடமைகளை மறக்காதீர்கள். உங்களுக்கு உதவ கடவுள் வருவார் என்ற நம்பிக்கையுடன் ப்ராம்மண்யத்தை மீண்டும் தேடிப்பெற்று நிலைநிறுத்துங்கள்.

நாங்கள் எங்களால் முடிந்த வரை அப்படி செய்யப்பார்க்கிறோம். ஆனாலும் இது ப்ராம்மணர்களுக்கு போதாத காலம்தான்.

மோசமான நாட்கள் எப்போது தோன்றின? அதையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்தணர்கள் ஆசாரம் தர்மங்களை கைவிட்டுவிட்டு உலக சமாசாரங்களில் போட்டி போட ஆரம்பித்த போதுதான் அது துவங்கியது. அவர்கள் தாம் யார் என்பதை மறந்து, கொஞ்சமும் நன்றியில்லாமல் காலங்காலமாக வந்த பாரம்பரியத்தை துஷ் பிரயோகம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த பந்தயத்தில் பின்னே தள்ளப்பட்டவர்கள் முதலில் ஆச்சர்யத்துடனும் பின் பொறாமையுடனும் இப்போது வெறுப்புடனும் பார்க்க ஆரம்பித்தார்கள். அந்தணர்கள் இந்த பந்தயங்களில் இருந்து வெளியே போகட்டும்; அவர்களுக்கு உரிய மரியாதையை பழையபடி அவர்கள் திரும்பப்பெறுவார்கள். அவர்கள் பெற்ற மரியாதை மற்றவர்களைவிட அவர்கள் பலமாக இருந்ததாலோ அல்லது பணக்காரர்களாக இருந்ததாலோ இல்லை. மாறாக அவர்களது திருப்தியாக இருக்கும் ஸ்வபாவமே அதை கொடுத்தது. அவர்களது தர்மமே அவர்களை பலமான மற்றவர்களை விட வலிமையுள்ளவர்கள் ஆக்கிற்று. போதாத காலம் என்று நாம் சொல்வதை நாமேதான் உருவாக்கினோம். ஆகவே எப்போது வேண்டுமானாலும் நாமே அதை முடிக்க முடியும். எளிய நம்பிக்கை, நேர்மையான வாழ்கைக்கு திரும்பினால் போதும். நம் முன்னோர்களுக்கு இருந்த தெய்வ ஈடுபாடும், திருப்தியால் ஏற்பட்ட அமைதியும் இருந்தால் போதும். அந்தணர்கள் ஆதர்ச நிலையில் இருந்து எவ்வளவு கீழே விழுந்துவிட்டார்கள் என்பதை சரியாக உணர்த்துமானால் போதாத காலம் அவ்வளவு கெட்டதாக இல்லாமல் நல்லதாகவே முடியும்.
நிறைந்தது.