Pages

Wednesday, October 14, 2015

கிறுக்கல்கள்! - 45


இங்கிதமாக நடந்து கொள்வதைப்பற்றியோ நல்ல பழக்க வழக்கங்களை கொண்டு இருப்பது குறித்தோ மாஸ்டர் மிகவும் குறிப்பாக இருப்பதில்லை. ஆனால் அவர் மற்றவர்களுடன் நடந்து கொள்வதைப்பார்த்தால் அதில் ஒரு மரியாதையும் அழகும் இருக்கும்.

ஒரு இளம் சீடன் மாஸ்டரை இரவு அவரது வீட்டுக்கு காரில் அழைத்துச்சென்றார். வழியில் ஏற்பட்ட பிரச்சினைக்காக போக்குவரத்து காவலரை மோசமாக திட்டினார். பின் மாஸ்டரிடம் சொன்னார், “நான் எப்படி உணர்கிறேன் என்பதை ஒளித்து வைப்பதில்லை; வெளிப்படையாக சொல்லிவிடுவேன். போலியாக பணிவுடன் நடப்பது வெறும் சூடான காத்துதான்!”


மாஸ்டர் சொன்னார்: ”உண்மைதான். அந்த சூடான காத்துதான் இந்த வண்டியின் டயரில் இருக்கிறது; அது கரடு முரடான சாலையில் பயணத்தை எவ்வளவு சுலபமாக்குகிறது பார்!”

No comments: